தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வூதியத்திற்காக பல கி. மீ. நடக்கும் 70 வயது மூதாட்டி

2 mins read
c8a22e93-efe4-462c-ac4c-3db52b085bbd
-

புவ­னேஷ்­வர்: ஓய்­வூ­தி­யம் பெறு­வ­தற்­காக எழு­பது வயது மூதாட்டி ஒரு­வர் பல கிலோ மீட்­டர் தூரம் வங்­கிக்கு நடந்தே செல்கிறார்.

ஒடி­ஷா­வின் ஜாரி­கான் மாவட்­டத்­தில் உள்ள பனு­வ­குடா கிரா­மத்­தில் இந்த அவ­லச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

நப்­ரங்­பூர் பகு­தி­யில் உள்ள வங்­கிக்கு கொளுத்­தும் வெயி­லில் வெறுங்­கா­லு­டன் ஒரு உடைந்த நாற்­கா­லி­யின் உத­வி ­யு­டன் அவர் நடந்து சென்­ற­தாக இண்­டியா டுடே தக­வல் தெரி­வித்­தது.

சூர்யா ஹரி­ஜன் என்ற அந்த மாது தள்­ளாடித் தள்­ளாடி சாலை­யில் தன்­னந்­த­னி­யாக நடந்­து­செல்­லும் காட்சி சமூக ஊட­கங்­களில் பரவி பலரை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.

மூத்த குடி­மக்­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் உதவித் திட்­டங்­கள் பல இருந்­தா­லும் அவை உரி­ய­வர்­க­ளைச் சென்­ற­டை­வ­தில்லை.

ஏழ்மை நிலை­யில் வசித்து வரும் சூர்யா ஹரி­ஜ­­னின் மூத்த மகன் குடும்­பத்­தைக் காப்­பாற்­று­வ­தற்­காக வேறொரு மாநி­லத்­தில் குடி­யேறி பணி­யாற்றி வரு­கி­றார்.

அவ­ரது இளைய மகன் அவ­ரு­டன் தங்கி கால்­ந­டை­களை மேய்த்து வாழ்­வா­த­ாரத்­துக்கு உதவி வரு­கி­றார். குடி­சை­யில் வசிக்­கும் மூதாட்­டி­யின் வாழ்க்கை நாளுக்கு நாள் மோச­மாகி வரு­கிறது.

இதற்கு முன்பு ஓய்­வூ­தி­யம் அவ­ரது கைக்கு வந்து சேர்ந்­தது. ஆனால் தற்­போது நடை­மு­றை­கள் மாறி­விட்­டன. அவ­ரது ஓய்­வூ­தி­யம் அவ­ரது வங்­கிக் கணக்­கில் நேர­டி­யா­கச் சேர்க்­கப்­ப­டு­கிறது.

இத­னால் வங்­கிக்கு நேர­டி­யா­கச் சென்று அவர் தனது கைநாட்டை அதி­காரி முன்பு பதிவு செய்­தால்­தான் ஓய்­வூ­தி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. சில சம­யங்­களில் அவ­ரது கைரேகை வங்கி ஆவ­ணத்­து­டன் ஒத்­து­ இல்லாமல் வித்­தி­யா­ச­மா­க இருப்­ப­தால் ஓய்­வூ­தி­யம் மறுக்­கப்­ப­டு­கிறது. இப்­படி கடந்த நான்கு மாதங்­க­ளாக அவ­ருக்கு ஓய்­வூ­தி­யம் வழங்­கப்பட­வில்லை எனக் கூறப்­ ப­டு­கிறது. சூர்யா ஹரி­ஜ­னுக்கு வய­தா­கி­விட்­ட­தால் பல­வீ­ன­மாகி விட்டார். ஓர் உடைந்த நாற்­காலி உத­வி­யு­டன் அவர் நடந்து செல்­கி­றார். உள்­ளூர் பஞ்­சா­யத்து அலு­வ­ல­கத்­தி­ல் முறை­யிட்­டும் அவ­ருக்கு உதவி கிடைக்க வில்லை. இந்நிலை­யில் வீட்­டுக்கு ஓய்­வூ­தி­யம் வந்து சேர ஏற்­பாடு செய்­வ­தாக உள்­ளூர் நிர்­வாக அதி­கா­ரி­கள் சிலர் அவ­ருக்கு உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்.