சூடானில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை

சூடானில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை

1 mins read
21f591be-82b3-4b49-a869-e3c2fd5e0903
-

புது­டெல்லி: சூடா­னில் ராணு­வம் மற்­றும் துணை ராணு­வப் படை­க­ளி­டையே மோதல் ஏற் பட்­டுள்­ள­தால் நாடு முழு­வ­தும் பதற்­றம் நில­வு­கிறது.

இந்த மோத­லில் அப்­பாவி மக்­களும் கொல்­லப்படு­கின்­ற­னர். இந்த நிலை­யில் சூடா­னின் பல்­வேறு பகு­தி­களில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை மீட்க இந்திய அரசு பல்­வேறு முயற்­சி ­களை எடுத்து வரு­கிறது.

சூடான் நில­வ­ரம் குறித்து பிர­த­மர் மோடி தலை­மை­யில் நேற்று உயர்­மட்ட ஆலோசனைக் கூட்­ட­மும் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் மற்­றும் தூத­ரக அதி­கா­ரி­கள், விமா­னப்­படை தள­பதி ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

இதில் இந்­தி­யர்­களை துரி­த­மாக மீட்­கும் திட்­டங்­க­ளைத் தயா­ரிப்­பது குறித்­தும் பிர­த­மர் மோடி ஆலோ­சனை நடத்­தி­னார். சூடா­னின் தற்­போ­தைய சூழல் குறித்து ஆய்வு செய்த பிர­த­மர், சூடானில் உள்ள 3,000க்கும் மேற்­பட்ட இந்­தியர் களுக்கு அனைத்து உத­வி ­க­ளையும்­ வழங்க வேண்­டும் உத்தரவிட்­டார்.