ஐந்து வீரர்கள் உயிரிழப்பு; நோன்புப் பெருநாளைக் கொண்டாடாத கிராமம்

2 mins read
d4d45774-df12-41e1-9824-250d3088e04a
-

பூஞ்ச்: இந்­தியா முழு­வ­தும் நேற்று நோன்­புப் பெரு­நாளை இஸ்­லா­மி­யர்­கள் உற்­சா­க­மா­கக் கொண்­டா­டிய வேளை­யில் காஷ்­மீ­ரில் உள்ள ஒரு குக்­கி­ரா­மத்­தில் மட்­டும் நோன்­புப் பெரு­நாள் கொண்­டாடப்ப­ட­வில்லை.

பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்த ஐந்து ராணுவ வீரர் ­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும்­வி­த­மாக பூஞ்ச் மாவட்­டத்­தில் உள்ள சாங்­கி­யோட் கிராம மக்­கள் கொண்­டாட்­டங்­க­ளைத் தவிர்த்­த­னர்.

சென்ற வியா­ழக்­கி­ழமை ராணுவ வாக­னம் ஒன்று பாலா­கோட்­டில் உள்ள பசூனி ராணுவ தலை­மை­ய­கத்­தில் இருந்து பழங்­கள் உள்­ளிட்ட பொருள்­க­ளு­டன் சாங்­கி­யோட்­டில் நடை­பெ­ற­வி­ருந்த இஃப்தார் விருந்­துக்­குப் புறப்­பட்­டுச் சென்­றது. அதில் ரைஃபிள்ஸ் படை­யைச் சேர்ந்த ஆறு வீரர்­கள் பய­ணம் செய்­த­னர்.

அந்த வாக­னம், பிம்­பர் காலி என்ற பகு­தி­யில் இஃப்தார் விருந்­துக்­காக மேலும் சில பொருள்­களை ஏற்­றிக்­கொண்­டி­ருந்­த­போது பயங்­க­ர­வா­தி­கள் கையெ­றிக் குண்­டு­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இந்­தத் தாக்­கு­த­லுக்­குப் பிறகு அரு­கி­லுள்ள பட்டா துரி­ய­னி­ லிருந்து ராணுவ வீரர்­களும் கிரா­ம­வா­சி­களும் உட­ன­டி­யாக சம்­பவ இடத்தை அடைந்­த­போது, ஐந்து வீரர்­களும் கரு­கிக் கிடந்­த­னர். ஒரு­வர் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்­தார். வாக­னத்­தி­லி­ருந்த பழங்­கள், உணவுப் பொட்டலங்கள் சித­றி­யி­ருந்­தன.

இந்­தத் தாக்­கு­தல் தங்­க­ளு­டைய கிரா­மத்­தில் நடந்­த­தால் சாங்­கி­யோட் மக்­கள் கவலை அடைந்­த­னர். ரம­லான் பண்­டி­கை­யைக் கொண்­டா­டப்­போவ தில்லை என்று அவர்­கள் முடிவு செய்­த­னர்.

"துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­ப­வத்­தில் ஐந்து வீரர்­கள் உயி­ரி­ழந்த நிலை­யில் பண்­டி­கையை எப்­ப­டிக் கொண்­டா­டு­வது. எங்­க­ளுக்கு அந்­தச் சம்­ப­வம் பற்றி தக­வல் கிடைத்­த­துமே கிரா­மம் முழு­வ­தும் கவலை தொற்­றிக்­கொண்­டது. நாங்­கள் நோன்­புப் பெரு­நா­ளுக்கு தொழுகை மட்­டுமே செய்­கி­றோம். மற்­ற­படி கொண்­டாட்­டங்­க­ளைத் தவிர்க்­கி­றோம்," என்று கிரா­மத்­தின் தலை­வ­ரான முக்­தி­யாஸ் கான் தெரி­வித்­தார். தாக்­கு­த­லில் காய­ம­டைந்த ரஜோரி என்ற வீரர் மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டார். இதற்­கி­டையே தாக்­கு­தலை நடத்­திய தீவி­ர­வா­தி­க­ளைத் தேடும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. இந்­தத் தாக்­கு­தலை தொடர்ந்து பாட்­டா­டோ­ரியா எனும் அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் வானூர்தி, மோப்ப நாய்­க­ளைக் கொண்டு பாது­காப்­புப் படை­யி­னர் தீவி­ர­வா­தி­க­ளைத் தேடி வரு­கின்­ற­னர். 'ஜெய்ஷ்' என்ற பயங்­க­ர­வாத அமைப்பு தாக்­கு­த­லுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.