பெங்களூரு: கர்நாடாகாவில் வேட்பு மனு பரிசீலனை முடிந்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) 211 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர் தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வியாழக்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 3,632 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதாவது 3,632 பேரும் 5,102 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் கனகபுரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் மாநிலத் தலைவருமான டி.கே.சிவக்குமாரின் மனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
சவதத்தி-எல்லம்மா, அவுரத், ஹாவேரி, ராய்ச்சூர் மற்றும் சிவாஜி நகர் ஆகிய 5 தொகுதி களுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையில் உள்ள நிலையில் 3,044 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் ஆண் வேட்பாளர்கள் 4,607 பேரும் பெண் வேட்பாளர்கள் 381 பேரும் உள்ளனர். 3வது பாலின வேட்பாளர் ஒருவர் உள்ளார்.
இம்மாதம் 24ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை மீட்டுக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அன்று எத்தனை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருப்பார்கள் என்பது உறுதியாகிவிடும்.
பழனிசாமி தரப்பு
வேட்பாளர் ஏற்பு
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா மாநிலம் புலிகேசி தொகுதியில் அதிமுக வின் அதிகாரபூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.
வேட்பு மனு பரிசீலனையில் டி. அன்பரசன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதிகளில் நிறுத்தப் பட்ட வேட்பாளர்களின் மனுக் களை தேர்தல் ஆணையம் நிரா கரித்துள்ளது.
வேட்பு மனு படிவத்தை வேட்பாளர்கள் முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

