அயோத்தியில் பேருந்து-லாரி மோதல்; எழுவர் மரணம்

அயோத்தியில் பேருந்து-லாரி மோதல்; எழுவர் மரணம்

1 mins read
151f31c1-86b9-4375-87d5-d006d219c21a
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் உள்ள அயோத்­தி­யில் லக்னோ- கோரக்­பூர் நெடுஞ்­சா­லை­யில் தனி­யார் பய­ணி­கள் பேருந்­தும் லாரி­யும் நேருக்கு நேர் மோதி­ய­தில் ஏழு பேர் மாண்­ட­னர். நாற்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­னர்.

இந்த விபத்­தில் பேருந்து பக்­க­வாட்­டில் சாய்ந்­தது.

வெள்­ளிக்­கி­ழமை மாலை அயோத்­தி­யிலி­ருந்து அம்­பேத்­கார் நகரை நோக்­கிச் சென்ற பேருந்து சாலை­யில் திரும்­பிக் கொண்டி­ருந்­த­போது விபத்து நேர்ந்­தது.

எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதி­யது.

இதில் ஏழு பேர் சம்­பவ இடத்­தி­லேயே கொல்­லப்­பட்­ட­னர்.

உட­ன­டி­யாக உள்­ளூர் நிர்­வா­கம் மீட்­புப் பணி­யில் இறங்­கி­யது.

"காயம் அடைந்த 12 பேரை மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­தோம். மீட்­புப் பணி­கள் முடிந்­து­விட்­டன," என்று அயோத்­ தியா மாவட்ட நீதி­பதி நிதிஷ் குமார் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே உயி­ரி­ழந்த குடும்­பத்­தி­ன­ருக்கு முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

காய­ம­டைந்தவர்­க­ளுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் மாவட்ட நிர்­வா­கத்­துக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.