மூன்று நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட மலையேறி 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்துகிடந்தார்

2 mins read
f310db00-fcc9-4a7c-bcfd-a5ace438f313
-

காட்­மாண்டு: நேப்­பா­ளத்­தில் அன்­ன­பூர்ணா மலைப்­பா­தை­யில் காணா­மல் போன இந்­திய மலை­யேற்ற வீரர் அனு­ராக் மாலு மூன்று நாள்­க­ளுக்­குப் பிறகு உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டார்.

அவ­ரது உடல் நிலைமை மிக­வும் கவ­லைக்­கி­ட­மாக இருப்ப தாக­வும் அவ­ருக்கு மருத்­துவ மனை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவ­ரது சகோ­த­ரர் சுதிர் தெரி­வித்­துள்­ளார்.

ராஜஸ்­தான் மாநி­லம் கிஷன்­கர் நக­ரைச் சேர்ந்த அனு­ராக், 34, திங்­கள்­கி­ழமை அன்­ன­பூர்ணா மலை­யில் இருந்து இறங்­கும் போது முகாம்-IIIல் இருந்து ஆழ­மான பள்­ளத்­தில் விழுந்­து­விட்­டார். அவர் விழுந்த இடம் கடல் மட்­டத்­தி­லி­ருந்து 6,000 மீட்­டர் உய­ரத்­தில் உள்­ளது.

அன்­ன­பூர்ணா மலை உல­கின் 10வது உய­ர­மான மலை­யா­கும்.

"அவர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டா­லும் ஆபத்­தான நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். எங்­கள் கவ­னம் முழு­வ­தும் அவர் விரை­வில் குண­ம­டை­வ­தில்­தான் உள்­ளது," என்று அனு­ராக் மீட்­கப்­பட்ட செய்­தியை விவ­ரித்த அவ­ரது ஒன்­று­விட்ட சகோ­த­ரர் சுதிர் மாலு குறிப்­பிட்­டார்.

மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த குழு அவர் ஆழ­மான பள்­ளத்­தில் இருந்­த­தைக் கண்­டு­பி­டித்­த­தாக அவர் சொன்­னார். சென்ற வியா­ழக்­கி­ழமை ஏழு நேப்­பாள மலை­யே­றி­கள் அனு­ராக்கை 300 மீட்­டர் ஆழ­மான பள்­ளத்­தில் இருந்து அவ­ரைக் காப்­பாற்­றி­யுள்­ள­னர் என்று 'செவன் சம்­மிட் டிரெக்ஸ்' என்ற அமைப்­பின் தலை­வர் மிங்வா ஷெர்பா தெரி­வித்­தார்.

இந்த மீட்­புச் சம்­ப­வம் மில்­லி­ய­னில் ஒன்று என்று அவர் குறிப்­பிட்­டார்.

போலந்­தின் பிர­பல மலை­யே­றும் வீரர் ஆடம் பிலேக்கி மற்­றும் அவ­ரது நண்­ப­ரும் மீட்புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர். அனு­ராக் விழுந்­து­கி­டந்த இடத்­திற்கு மூன்று நேப்­பா­ளி­கள் மற்­றும் ஒரு போலந்து மலை ஏறு­ப­வர் இறங்­கி­னர்.

அவர்­கள் அனு­ராக் உயி­ரு­டன் இருப்­ப­தைக் கண்­ட­றிந்­த­னர். அதன் பிறகு மீட்­புக் குழு­வி­னர் அவரை பள்­ளத்­தில் இருந்து மெது­வாக வெளியே கொண்டு வந்­த­னர் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அனு­ராக் மாலு 2010 ஆம் ஆண்­டில் டெல்லி ஐஐ­டி­யில் பி.டெக் முடித்­துள்­ளார்.