தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தண்டவாளத்தில் சிறுநீர் கழித்தபோது மாடு முட்டி மாண்ட முதியவர்

1 mins read
1e6812a6-667e-4d10-b1ca-2f4036769fea
ரயிலால் மோதப்பட்டு காற்றில் வீசியெறியப்பட்ட மாடு மோதி ஆடவர் இறந்தார். இந்தியாவில் ரயிலால் மாடுகள் மோதப்படுவது அடிக்கடி நடக்கும் ஒன்று. படம்: ராய்ட்டர்ஸ் -

அல்வார்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக்கோண்டிருந்தபோது ஓர் ஆடவர் மாடு முட்டி உயிரிழந்தார்.

82 வயது ஷிவ்தயால் சர்மாவுக்கு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

அல்வார் நகரில் முன்னாள் ரயில்வே ஊழியரான அவர் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது ரயிலால் மோதப்பட்டு காற்றில் வீசியெறியப்பட்ட ஒரு மாடு அவரை முட்டியிருக்கிறது.

சம்பவ இடத்திலேயே திரு ஷிவ்தயால் உயிரிழந்தார்.

தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த வேறொரு ஆடவர் நூலிழையில் உயிர் தப்பினார்.