மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: சர்ச்சை

2 mins read
9360bdca-0245-4e76-912a-56984532fc85
-

போபால்: மத்­திய பிர­தேச

அர­சின் இல­வச திரு­ம­ணத்

திட்­டத்­தின் கீழ், மணப்­பெண்

களுக்கு கர்ப்ப பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது பெண்­களை அவ­ம­திக்­கும் செயல் என்று காங்­கி­ரஸ் கட்சி கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய பிர­தே­சத்­தின் திண்­டோரி மாவட்­டத்­தில் மாநில அரசு சார்­பில் 219 ஏழை ஜோடி­க­ளுக்குத் திரு­ம­ணம் செய்து வைக்­கப்­பட்­டது.

கடா­சரை நக­ரில் நேற்று முன்­தி­னம் நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் திரு­ம­ணம் செய்­து­கொண்ட ஜோடி­க­ளுக்குத் தலா ரூ.56 ஆயி­ரம் நிதி­யு­த­வி­யும் அளிக்­கப்­பட்­டது.

இந்த மணப்­பெண்­களில் ஐவ­ருக்கு கர்ப்ப பரி­சோ­தனை நேர்­ம­றை­யாக வந்த பிறகு, அவர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அந்த ஐவ­ரில் ஒரு­வர், "எனது கர்ப்ப பரி­சோ­தனை நேர்­ம­றை­யாக வந்­தது. இதன் கார­ண­மாக எனது பெயர் இறுதிப் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்­டது. இருப்­

பி­னும் அதி­கா­ரி­கள் எனக்குத் தெளி­வான கார­ணத்தைத் தெரி­விக்­க­வில்லை," என்று கூறி­னார்.

அதன் தொடர்­பாக கருத்துரைத்த பச்­சர்­கான் கிரா­மத்­தின் சர்­பஞ்ச் மேதானி மராவி, கடந்த காலங்­களில் இது­போன்ற சோத­னை­கள் நடத்­தப்­பட்­ட­தில்லை. இப்­போது தங்­கள் குடும்­பத்­தின் முன் நிற்­கும் பெண்­க­ளுக்கு இது அவ­மா­னம் என்று கூறி­னார்.

இது­தொ­டர்­பாக முன்­னாள் முதல்­வர் கமல்­நாத்­தின் கண்­டன டுவிட்­டில், "இந்­தச் செய்தி உண்­மையா என்­பதை முத­ல­மைச்

சரி­ட­மி­ருந்து நான் அறிய விரும்­பு­கி­றேன். இந்­தச் செய்தி உண்­மை­யாக இருந்­தால், யாரு­டைய உத்­த­ர­வின் பேரில் மத்­திய பிர­தே­சத்­தின் மகள்­க­ளுக்கு இந்தக் கொடூ­ர­மான அவ­ம­திப்பு செய்­யப்­பட்­டது?

"ஏழை­கள், பழங்­கு­டி­யின மக்­க­ளின் மகள்­க­ளுக்கு முதல்­வர் பார்­வை­யில் கண்­ணி­யம் இல்­லையா? சிவ­ராஜ் ஆட்­சி­யில், பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் மத்­திய பிர­தே­சம் ஏற்­கெனவே நாட்­டி­லேயே முத­லி­டத்­தில் உள்­ளது.

"இந்த முழு விவ­கா­ரத்­தி­லும் நியா­ய­மான, உயர்­மட்ட விசா­ரணை நடத்­தப்­பட்டு, குற்­ற­வா­ளி­கள் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­பட வேண்­டும். இது கர்ப்ப பரி­சோ­தனை விவ­கா­ரம் மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த பெண் இனத்­தின் மீதான தீங்­கான அணு­கு­மு­றை­யும் ஆகும்," என்று பதிவிட்டு உள்ளார்.

திண்­டோ­ரி­யின் தலைமை மருத்­துவ, சுகா­தார அதி­காரி டாக்­டர் ரமேஷ் மராவி கூறு­கை­யில், "வயது சரி­பார்ப்பு, ரத்த சோகை, உடல் தகு­தியைக் கண்­ட­றிய பொது­வாகச் சோத­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

"அவர்­களில் சிலர் மாத­

வி­லக்கு சரி­வர வர­வில்லை என்று கூறி­ய­தால் உயர் அதி­

கா­ரி­க­ளின் உத்­த­ர­வின் பேரில், சந்­தே­கத்­திற்­கு­ரிய சில பெண்களுக்குச் சோதனை செய்­யப்­பட்­ட­போது, அவர்­களில் ஐவர் கர்ப்­ப­மாக இருப்­பது தெரியவந்­தது. அத­னால் அவர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொள்ள தடுத்து வைக்­கப்­பட்­ட­னர். இந்த நிலை­யில், உள்­ளாட்சி நிர்­வா­க­மும் மாநில அர­சும் கர்ப்­ப பரி­சோ­தனை செய்து பெண்­களை அவ­ம­தித்து விட்­ட­தாக காங்­கி­ரஸ் குற்­றம் சாட்­டு­கிறது," என்று தெரி­வித்­துள்­ளார்.