வெளியுறவுத்துறை: இந்தியர்களை மீட்க இரண்டு விமானங்கள், கப்பல் தயார்

வெளியுறவுத்துறை: இந்தியர்களை மீட்க இரண்டு விமானங்கள், கப்பல் தயார்

1 mins read
5acb672e-5e1a-4317-8eec-7cb2806d4881
-

புது­டெல்லி: உள்­நாட்டுப் போர் நடை­பெ­றும் சூடான் நாட்­டில் இருந்து 4,000 இந்­தி­யர்­களை பாது­காப்­பாக மீட்க இந்­திய ராணு­வத்­தின் இரண்டு விமா­னங்­களும் ஒரு கப்­ப­லும் தயார் நிலை­யில் உள்­ள­தாக வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சு தெரி­வித்­துள்­ளது.

சூடா­னில் அந்­நாட்டு ராணு­வத்­திற்­கும் துணை ராணு­வத்­திற்கு இடையே மோதல் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் இந்­தியா உள்­ளிட்ட பல நாடு­கள் அந்­நாட்­டில் உள்ள தங்­கள் நாட்டு மக்­களை மீட்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன.

இந்­தி­யா­வும் சூடா­னில் உள்ள சுமார் 4,000 இந்­தி­யர்­களை பாது­காப்­பாக மீட்க முயற்சி எடுத்­து­

வ­ரு­கிறது.

இந்­திய விமா­னப்­ப­டைக்கு சொந்­த­மான இரண்டு C-130J விமா­னங்­கள் தற்­போது சவூதி அரே­பி­யா­வின் ஜெட்­டா­வில் தயார் நிலை­யில் உள்­ளன.

மேலும், இந்­திய கடற்­ப­டை­யின் ஐஎன்­எஸ் சுமேதா (INS Sumedha) கப்­ப­லும் சூடான் துறை­மு­கத்தை அடைந்­துள்­ளது என்று வெளி­யு­றவு அமைச்­சு தெரி­வித்­துள்ளது.

"சூடா­னில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­க­ளு­டன் தூத­ர­கம் தொடர்ந்து தொடர்­பில் உள்­ளது. பாது­காப்­பாக இருப்­பது, தேவை­யற்ற நட­மாட்­டத்­தைக் குறைத்து ஆபத்­தைத் தவிர்ப்­பது குறித்து அவர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கிறது.

"சூடா­னில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய அர­சாங்­கம் அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கிறது.

"இந்­தி­யர்­க­ளின் பாது­காப்பு நிலை­மையை நாங்­கள் உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றோம்.

"சூடா­னில் இருந்து வெளி­யேற விரும்­பும் இந்­தி­யர்­க­ளின் பாது­காப்­பான பய­ணத்­திற்­காக நாங்­கள் பல தரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைத்துச் செயல்­பட்டு வரு­கி­றோம்," என வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சு அறிவித்து இருப்பது பலரையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது.