ஆந்திரா: செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேரை கைது செய்த போலிசார், அவர்களிட
மிருந்து ரூ.71 லட்சம் மதிப்
பிலான செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர ரெட்டி கூறுகையில், "திருப்பதியைச் சுற்றியுள்ள
பகுதியில் செம்மரம் கடத்தப்
படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"அப்போது வனப்பகுதியில் இருந்து வாகனம் வெளியே வந்தது. அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது அதில் செம்மரக் கட்டைகளும் தமிகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
"அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பத்து பேர் வனப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களையும் கைது செய்தோம். அவர்
களிடம் இருந்து ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை வேலைக்கு அமர்த்திய கடப்பாவைச் சேர்ந்த சங்கர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

