ஆந்திரா: செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாகத் தலை
நகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்றும் அங்கு தான் குடியேறப்போவதாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனால் அங்கு போராட்டம் வலுத்துள்ளது.
ஆந்திர மாநிலப் பிரி
வினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசக் கட்சி விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திர மாநிலத் தலைநகராக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் அங்கு சட்டமன்றம், தலைமைச் செயலகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான குடி
யிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த தேர்
தலில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒருசேர மேம்பாடு காண வேண்டும் என்பதால் சட்டமன்றத் தலைநகராக அமராவதியும் நிர்வாக தலைநகராக தொழில் நகரமான விசாகப்பட்டினமும் நீதித்துறைத் தலை
நகராக கர்நூலும் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்புக்கு அமராவதியில் தலைநகரம் அமைக்க சுமார் 31,000 ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு வகையான போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்
தினம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படத் துவங்கும். நான் அங்கு குடியேற இருக்கிறேன்," என்று அறிவித்தார்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மாநிலத்தின் மற்றப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் சேர்த்து விசாகப்பட்டின மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
"விசாகப்பட்டின மக்கள் இனிமேல் ஆளும் கட்சியினர் இங்கு நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவார்கள். இருக்கும் நிலத்தை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று புலம்பத் துவங்கியுள்ளனர்," என்று கூறினார்.

