தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் பாதல் காலமானார்

1 mins read
dcfe95ba-e297-4c52-8216-3fc5cce29a8a
-

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநில சிரோன்­மணி அகாலி தளம் கட்­சி­யின் மூத்த அர­சி­யல் தலை­வ­ரும், ஐந்து முறை முதல்­வ­ரா­கப் பதவி வகித்­த­வ­ரு­மான பிர­காஷ் சிங் பாதல் (படம்) கால­மா­னார். அவ­ருக்கு வயது 95.

வயது மூப்­பி­னால் ஏற்­பட்ட உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக அவ­ருக்கு மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­டது. அத­னால், சில நாள்­க­ளுக்கு முன்­னர் மொஹா­லி­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார்.

இருப்­பி­னும் சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தி­னம் இரவு அவர் உயி­ரி­ழந்­தார். பிர­த­மர் நரேந்­திர மோடி, திரு பாத­லின் நல்லுட­லுக்கு நேரில் சென்று அஞ்­சலி செலுத்­தி­னார்.

திரு பாத­லின் மறைவை முன்­னிட்டு நாடு முழு­வ­தும் இரண்டு நாள் துக்­கம் அனு­சரிக்­கப்படு­வ­தாக மத்­திய உள்­துறை அமைச்சு கூறியது.