தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவசப் பேருந்து வசதி

1 mins read
264b3a3b-ea65-4d86-8988-a9b15eca27bc
-

புது­டெல்லி: டெல்­லி­யில் 13 லட்­சம் தொழி­லா­ளர்­க­ளுக்கு மருத்­து­வக் காப்­பீடு, இல­வ­சப் பேருந்­துப் பயண வச­தி­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

தொழி­லா­ளர் துறை கூட்­டத்­தில் பேசிய முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் விரை­வில் அவற்றை அமல்­ப­டுத்­தும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

தொழி­லா­ளர் துறை­யில் ரூ.4,000 கோடி வரை செலவு செய்­யா­மல் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் கூறி­னார்.

அந்­தத் தொகை, டெல்­லி­யின் ஒவ்­வொரு தொழி­லா­ள­ரை­யும் சென்­ற­டை­யும் வகை­யில் திட்­டங்­கள் அமைக்­கப்­ப­ட­வில்லை என அவர் அதி­ருப்தி தெரி­வித்­தார்.

எனவே 13 லட்­சம் தொழி­லா­ளர்­க­ளுக்கு மருத்­து­வக் காப்­பீ­டும் அர­சுப் பேருந்­து­களில் இல­வ­சப் பய­ணம் செய்­வ­தற்­கான அனு­ம­தி­யும் வழங்கி முதல்­வர் உத்­த­ர­விட்­டார்.

ஜூன் மாதத்­திற்கு முன்­பாக டெல்­லி­யின் தொழி­லா­ளர்­கள் அனை­வ­ரை­யும் பதிவு செய்ய வும் ஒரு வாரத்­திற்­குள் 60 வய­திற்கு மேற்­பட்ட தொழி­லா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு ஓய்­வூ­தி­யம் வழங்­க­வும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார். குறுந்­தகவல் மூலம் தொழி­லா­ளர் துறை­யின் பலன்­கள் குறித்து எடுத்­து­ரைக்­கும்­படி அவர் கூறி­னார்.