தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீரர்களின் சவப்பெட்டியை சுமந்து சென்ற முதல்வர்

1 mins read
e783ab21-630a-4be6-b0d3-9d61d974db68
-

தண்­டே­வாடா: சத்­தீஸ்­கர் மாநி­லம் தண்­டே­வாடா மாவட்­டத்­தில், நக்­சல்­கள் நடத்­திய பயங்­கர தாக்­கு­த­லில், 11 காவல்­து­றை­யி­னர் வீர­ம­ர­ணம் அடைந்­த­னர். உயி­ரி­ழந்த வீர­ர்களின் இறுதிச் சடங்கு சத்­தீஸ்­க­ரில் நேற்று நடந்­தது.

முதல்­வர் பூபேஷ் பாகல் இறு­திச் சடங்­கில் கலந்துகொண்டு வீர­ரின் உடல் இருந்த சவப்­பெட்­டியை தன்­னு­டைய தோளில் தூக்கிச் சென்­றார்.

"வீரர்­க­ளின் தியா­கம் வீண் போகாது. நக்­ச­லைட்­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சம்­ப­வத்­தில் 2 நக்­ச­லைட்டு ­களை காவல்­து­றை­யி­னர் கைது செய்துள்­ள­னர்," என்றார் பூபேஷ்.

பாதுகாப்புப் படையினரைத் திட்­ட­மிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடி­ம­ருந்தைப் பயன்­படுத்தி மாவோ­யிஸ்­டு­கள் தாக்­கு­தலை நடத்தியுள்ள­னர்.

மாவோ­யிஸ்­டு­கள் இன்­ன­மும் உயிர்ப்­பு­டன் இருக்­கும் மாநி­லங்­களில் ஒன்று சத்­தீஸ்­கர். இம்­மா­நி­லத்­தில் மாவோ­யிஸ்­டு­கள் தாக்­கு­த­லில் இந்­தி­யப் பாது­காப்பு படை­யி­னர் படு­கொலை செய்­யப்­ப­டு­வது தொடர்ந்துகொண்டே இருக்­கிறது. மாவோ­யிஸ்­டு­கள் இது­வரை நடத்­திய தாக்­கு­த­லில் மிகக் கொடூ­ர­மா­னது 76 பாது­காப்பு படை­யி­னரை பலி­கொண்ட 2010ஆம் ஆண்டு தாக்­கு­தல்.