ராஜ்நாத் சிங்: பாதுகாப்பு ஒப்பந்தங்களை மீறக்கூடாது

ராஜ்நாத் சிங்: பாதுகாப்பு ஒப்பந்தங்களை மீறக்கூடாது

1 mins read
3fdace5d-284e-434c-bcfa-4fd0e42286c4
-

புது­டெல்லி: எல்­லைப் பகுதி களில் பாது­காப்­புத் தொடர்­பான ஒப்­பந்­தங்­களை மீறக்­கூ­டாது என தலை­ந­கர் டெல்­லி­யில் தம்­மைச் சந்­தித்­துப் பேசிய சீனப் பாது­காப்­புத் துறை அமைச்­சர் லீ ஷாங்­ஃபூ­வி­டம் மத்­திய பாது காப்­புத் துறை அமைச்­சர் ராஜ் நாத் சிங் வலி­யு­றுத்­தி­னார்.

ஷாங்­காய் ஒத்­து­ழைப்­புக் கூட்­ட­மைப்­பின் பாது­காப்­புத் துறை அமைச்­சர்­கள் மாநாடு டெல்­லி­யில் நேற்று நடை­பெற்­றது. ராஜ்­நாத் சிங் விடுத்த அழைப்பை ஏற்று பல்­வேறு நாடு­க­ளின் அமைச்­சர்­களும் மா­நாட்­டில் பங்­கேற்றனர்.

மாநாடு தொடங்­கு­வ­தற்கு முன்­னர் தஜ­கிஸ்­தான், ஈரான், கஸ­கஸ்­தான் நாட்­டுப் பாது­காப்பு அமைச்­சர்­க­ளைக் கைகு­லுக்கி வர­வேற்ற ராஜ்­நாத் சிங், சீன அமைச்­சர் லீ ஷாங்­ஃபூவை சந்­தித்­த­போது கைகு­லுக்­கா­மல் வணக்­கம் தெரி­வித்­தார். அதன்­பி­றகு இரு­வ­ரும் இந்­தியா-சீனா எல்லை விவ­கா­ரம் குறித்­தும் இரு­த­ரப்பு நல்­லு­ற­வுக்­கான மேம்­பா­டு­கள் குறித்­தும் வெளிப்­படை­யாக விவா­தித்­த­னர்.

இத­னைத்­தொ­டர்ந்து, ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாட்­டில் ராஜ்­நாத் சிங் பேசி­ய­போது, "பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக ஒற்­று­மை­யு­டன் போராட வேண்­டும். இந்த அமைப்பு வலுப்­பெற வேண்­டுமெனில் ஒன்றி­ணைந்து போரா­டு­வது அவ­சி­யம். புதிய வழி­க­ளைப் பயன்­ப­டுத்­தத் தொடங்கியுள்ள பயங்­க­ர­வா­தி­களை முறி­ய­டிக்க, இவ்­வமைப்பை வலுப்­படுத்த இந்­தியா உறுதி­ பூண்­டுள்­ளது," எனத் தெரி­வித்­தார்.