'யாரையும் நோகடித்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'

'யாரையும் நோகடித்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'

2 mins read
338f443c-cf52-4f29-9f81-305ae1330e9c
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக சட்­டப் பேர­வைத் தேர்­தலை முன்­னிட்டு கல்­புர்­கி­யில் நடை­பெற்ற பொதுக் கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே வியா ழனன்று பேசி­ய­போது, பிர­த­மர் நரேந்­திர மோடியை 'விஷப் பாம்பு' என்று விமர்­சித்­தி­ருந்­தார்.

இதற்கு கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா உள்­ளிட்ட பாஜ­க­வி­னர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

"காங்­கி­ர­சா­ரின் தரம் தாழ்ந்த விமர்­ச­னத்­துக்கு மக்­கள் தேர்த லில் தக்­க பாடம் புகட்டுவார் கள்," என குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், "நான் பிர­த­மர் மோடியை அவ்­வாறு குறிப்­பி­ட­‌வில்லை. பாஜ­க­வின் கருத்­து­கள் விஷப் பாம்பை போன்­றது என்­று­தான் சொல்ல வந்­தேன். எனது கருத்து யாரை­யும் புண்­ப­டுத்தி இருந்­தால் அதற்­காக மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என கார்கே தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, கர்­நா­ட­க­ாவின் 224 தொகு­தி­க­ளி­லும் ஒரே கட்­ட­மாக வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலை­யில், இருநாள் பய­ண­மாக இன்று (சனிக்­கி­ழமை) கர்­நா­ட­கா­வுக்கு வருகை அளிக்கும் பிர­தமர் மோடி, மாநி­லத்­தின் பிதார், பெல­காவி மாவட்­டப் பொதுக் கூட்­டங்­களில் பேசு­கி­றார்.

அதே­போல், இன்று முதல் காங்­கி­ரஸ் கட்­சிக்­கா­கப் பிர­சா­ரம் செய்­யப் போவ­தாக கன்­னட சூப்­பர் ஸ்டார் சிவ­ராஜ்­கு­மார் நேற்று தெரி­வித்­தார். அவர் தனது மனைவி கீதா சிவ­ராஜ்­குமாருடன் சோரபா தொகு­தி­யில் காங்­கி­ரஸ் சார்­பில் போட்­டி­யி­டும் மது பங்­கா­ரப்­பா­வுக்கு ஆதரவாக பிர­சா­ரம் செய்­ய­வுள்­ளார்.

மது பங்­கா­ரப்­பா­வும் கீதா சிவ­ராஜ்­கு­மா­ரும் கர்­நா­டக முன்­னாள் முதல்­வர் எஸ்.பங்காரப்­பா­வின் பிள்­ளை­கள் ஆவர்.

இத­னி­டையே, உடுப்பி மாவட்­டத்­தில் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிர­சா­ரம் செய்து, மீன­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி, கர்­நா­ட­கா­வில் காங்­கி­ரஸ் ஆட்சி அமைந்­த­வு­டன் அர­சுப் பேருந்­து­களில் பெண்­கள் இல­வ­ச­மா­கப் பய­ணம் செய்­யும் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­படும் என்று கூறி­னார். மீன­வர்­க­ளுக்கு 10 லட்­சம் ரூபாய்க்­கான காப்­பீடு, மீன­வப் பெண்­க­ளுக்கு வட்­டி­யில்­லாக் கடன், மானிய விலை­யில் டீசல் உள்­ளிட்ட அறி­விப்­பு­க­ளை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார்.