நெருக்குதல் தருகிறார்கள்; மற்போர் வீரர்கள் முறையீடு

நெருக்குதல் தருகிறார்கள்; மற்போர் வீரர்கள் முறையீடு

2 mins read
93e2eecb-b344-47cb-b48c-5db04d0dc079
-

புதுடெல்லி: இந்திய மற்போர் வீராங்கனைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இந்திய மற்போர் கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷணுக்கு எதிராக இந்திய மற்போர் வீரர்கள் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் மட்டுமின்றி நிதி முறைகேடு, முறையற்ற நிர்வாகம் ஆகியவை குறித்து வீரர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்போர் வீரர்களில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியாவுடன் நட்சத்திர வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

புதுடெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 23ஆம் தேதியன்று மீண்டும் போராட்டக் களத்திற்கு அவர்கள் திரும்பி உள்ளனர்.

"புகார் செய்து மூன்று மாதங்­கள் கடந்­து­விட்­டன. எங்­க­ளுக்கு இன்­னும் நீதி கிடைக்­க­வில்லை. அத­னா­லேயே நாங்­கள் மீண்­டும் போராட்­டத்­தில் இறங்கி இருக்­கி­றோம்.

"எங்­க­ளுக்கு நியா­யம் வேண்­டும். குற்­றப் பத்­தி­ரி­கை­யைக் கூட அதி­கா­ரி­கள் பதிவு செய்­யவில்லை.

"டெல்லி மக­ளிர் ஆணை­யம் எங்­க­ளுக்கு ஆத­ரவு அளித்­துள்­ளது. அதற்கு நன்றி தெரி­விக்­கி­றோம்," என்று இந்­திய மற்­போர் வீராங்­கனை வினேஷ் போகத் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், தங்­க­ளுக்கு உணவு மற்­றும் குடி­நீர் தரவிடா­மல் காவல்­து­றை­யி­னர் நெருக்­குதல் தரு­வ­தா­கப் போராட்­டத்­தில் ஈடு­படும் மற்­போர் வீரர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.

போராட்­டம் நடை­பெ­றும் இடத்­தில் மின்­சா­ர இணைப்­பும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் போராட விரும்­பி­னால் சாலை­யில் படுத்­துக்­கொள்­ளுங்­கள் என்று காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தா­க­வும் ஒலிம்­பிக் போட்­டி­யில் இந்­தி­யா­வுக்­காகப் பதக்­கம் வென்ற மற்போர் வீர­ரான பஜ்­ரங் பூனியா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இதற்கிடையே, போராட்­டம் நடத்­தும் மற்­போர் வீரர்­களை காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர்் பிரி­யங்கா காந்தி சந்­தித்து ஆறு­தல் கூறி­னார்.

"இந்­திய மற்­போர் கூட்­ட­மைப்­பின் தலை­வர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மற்­போர் வீராங்­கனை­கள் பாலி­யல் துன்­பு­றுத்­தல் புகார்­கள் செய்­த­தைத் தொடர்ந்து டெல்லி காவல்­துறை இரண்டு வழக்­கு­க­ளைப் பதிவு செய்­த­து. பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நியா­யம் கிடைக்க இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நட­வ­டிக்கை எடுப்­பார் என எனக்­குத் தோன்­ற­வில்லை. அவர் இந்த மற்போர் வீரர்­கள் மீது அக்­கறை கொண்­டி­ருந்­தால் அவர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி இருப்­பார். பாதிக்­கப்­பட்ட மற்­போர் வீரர்­க­ளுக்கு நாட்டு மக்­கள் துணை­யாக நிற்­கின்­ற­னர். பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு எதி­ராக இந்த மற்­போர் வீரர்­கள் குரல் எழுப்­பி­ய­தில் நான் மிக­வும் பெரு­மைப்­ப­டு­கி­றேன்," என்­றார் பிரி­யங்கா காந்தி.

இது ஒரு­பு­றம் இருக்க, தாம் எவ்­வித தவ­றும் செய்­ய­வில்லை என்று பிரிஜ் பூஷண் அடித்­துக்­கூ­று­கி­றார்.

தமக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணையை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.