ராணுவ வரலாற்றில் முதல்முறையாக சாதனை
புதுடெல்லி: இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக, பீரங்கிப் படையில் 5 பெண் அதிகாரிகள் பணியில் இணைந்துள்ளனா். அவா்களுக்கு சீன, பாகிஸ்தான் எல்லையோரப் பிரிவுகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் மேஹக் சைனி, லெப்டினன்ட் சாக்ஷி துபே, லெப்டினன்ட் அதிதி யாதவ், லெப்டினன்ட் பயஸ் முத்கில், லெப்டினன்ட் ஆகாங்ஷா ஆகிய ஐவரும் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சனிக்கிழமை வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்ததைத் தொடா்ந்து, பீரங்கிப் படையில் இணைந்தனா்.
இவா்களில் மூவருக்கு சீன எல்லையை ஒட்டிய ராணுவத்தின் முன்களப் பிரிவுகளிலும் மற்ற இருவருக்கு பாகிஸ்தான் எல்லை அருகே சவால்கள் நிறைந்த இடங்களிலும் பணி ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய பீரங்கிப் படையில் மொத்தம் 280 பிரிவுகள் உள்ளன. போஃபா்ஸ் ஹோவிட்சா்ஸ், தனுஷ், எம்-777 ஹோவிட்சா்ஸ், கே-9 வஜ்ரா உள்ளிட்ட பல்வேறு வகையான பீரங்கி அமைப்புகள் கையாளப்படுகின்றன.
முக்கியமாக அனைத்து பீரங்கி அமைப்புகளையும் கையாளும் பயிற்சி மற்றும் அனுபவத்தை பெறும் வகையில் பெண் அதிகாரிகள் பணியாற்றவுள்ளனா்.
கண்காணிப்பு மற்றும் இலக்கு கைப்பற்றுதல் பிரிவில் லெப்டினன்ட் சைனி, களப் பிரிவுகளில் சாக்ஷி, அதிதி, நடுத்தரப் பிரிவில் பயஸ், ஆகாங்ஷா ஆகியோா் பணியில் இணைந்துள்ளனா்.
பீரங்கிப் படையில் பெண் அதிகாரிகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம் ராணுவத்தில் அவா்களின் பங்கேற்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இவா்கள் தவிர 19 ஆண் அதிகாரிகளும் இப்படையில் இணைந்துள்ளனா். ஆண் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதே வாய்ப்புகளும் சவால்களும் பெண் அதிகாரி
களுக்கும் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த 2019ல் ராணுவக் காவல் படையில் வீராங்கனைகளை நியமிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறையை ராணுவம் தொடங்கியது. அதைத்தொடா்ந்து, ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவுகளில் பெண்களுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவைச் சோ்ந்த பெண் தளபதி சிவா செளஹான், உலகின் மிக உயரமான போா்முனையான சியாச்சினில் கடந்த ஜனவரியில் பணியமா்த்தப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

