ஆண்டுக்கு மும்முறை சமையல் எரிவாயு உருளை இலவசம்

1 mins read
df1586d4-2783-42fd-993b-7a18827e3684
-

பெங்­க­ளூர்: ஆண்­டுக்கு மூன்று முறை எரி­வாயு உரு­ளை­கள், தினந்­தோ­றும் அரை லிட்­டர் பால், மாதத்­துக்கு ஐந்து கிலோ அரிசி உள்­ளிட்ட பொருள்­கள் வழங்கப்­படும் என கர்­நா­டக சட்­டப் பேர­வைத் தேர்­த­லை­யொட்டி இல­வச அறி­விப்­பு­களை பாஜக அரசு அள்ளி வீசி­யுள்­ளது.

கர்­நா­டக மாநி­லத்­தில் இம்­மா­தம் 10ஆம் தேதி தேர்­தல் நடை­பெ­றும் சூழ­லில், அறிக்­கையை பாஜக நேற்று வெளி­யிட்­டது.

மாநில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை முன்­பாக பாஜக தேசி­யத் தலை­வர் ஜே.பி.நட்டா அறிக்கையை வெளி­யிட்­டார்.

அதன்­படி, பாஜ­க­வின் முக்­கிய அறி­விப்­பாக கர்­நா­ட­கா­வில் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால், வறு­மைக்­கோட்­டிற்குக் கீழ் உள்ள குடும்­பங்­க­ளுக்கு ஆண்­டுக்கு மூன்று முறை இல­வச சமை­யல் எரி­வாயு உரு­ளை­கள், தின­மும் அரை லிட்­டர் பால் அளிக்­கப்படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உகாதி புத்­தாண்டு, வினா­ய­கர் சதுர்த்தி, தீபா­வளி ஆகிய மூன்று பண்­டிகை காலங்­க­ளின்­போது எரி­வாயு உரு­ளை­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என­வும் ஒவ்­வொரு மாந­க­ராட்­சி­யி­லும் குறைந்த விலை­யில் தர­மான உண­வு­கள் வழங்­கப்­படும் என­வும் குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­து­டன், மாநி­லத்தில் உள்ள 10 லட்­சம் வீடற்­ற­வர்­க­ளுக்கு இல­வச வீட்­டு­ம­னைப் பட்டாவும் கர்­நா­ட­கா­வில் உள்ள பழ­மை­யான கோயில்­களை ரூ.1,000 கோடி செல­வில் புண­ர­மைக்­கப்­படும் என­வும் தெரி­வித்­துள்­ளது.

உச்ச நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் இருந்து வரும் வழக்கு ஒன்­றில் தேர்­தல் சம­யத்­தில் இல­வ­சங்­களை வாக்­கு­று­தி­க­ளாக கொடுப்­ப­தற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்த பாஜக, இப்­போது இல­வச வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கி­யி­ருப்­பது மக்­கள் பல­ரி­ட­மும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.