புகாரளித்த வீராங்கனைகளுக்கு காவலர்கள் பாதுகாப்பு

2 mins read
9f0dba21-f3fb-4b81-aa70-45b87fba69d4
-

புது­டெல்லி: இந்­திய மல்­யுத்த சம்­மே­ள­னத்­தின் தலை­வர் பிரிஜ் பூஷண் சரண் சிங்­குக்கு எதி­ராக பாலி­யல் புகார் கூறி­யுள்ள ஒரு பதின்ம வய­துப் பெண் (மைனர்), இதர ஏழு பெண் மல்­யுத்த வீரர் களுக்கு ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் பாது­காப்பு அளித்து வரு­கி­றோம் என டெல்லி காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

மேற்­கொண்டு விசா­ரணை நடத்­து­வ­தற்கு ஏது­வாக வாக்­கு­மூ­லங்­களை விரை­வில் பதிவு செய்­யு­மா­று புகார்­தா­ரர்­களைத் தாங்கள் கேட்­டுக்கொண்­டுள்­ள­தா­க­வும் மூத்த காவல் அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், பாலி­யல் குற்­றச்­சாட்­டில் தங்­க­ளுக்கு நியா­யம் கிடைப்­பது ஆசியக் கிண்ண போட்­டி­யில் பதக்­கங்­களை வெல்­வ­தை­வி­ட­வும் மிகப்­பெ­ரும் சவா­லாக இருப்­ப­தாக மல்­யுத்த வீராங்­க­னை­கள் ஆதங்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.

பிர­பல மல்­யுத்த வீராங்­க­னை­க­ளான சாக்‌ஷி மாலிக், ‌வினோஷ் போகத் உள்­ளிட்ட ஏழு பேர், இந்­திய மற்­போர் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்­க­ளைப் பாலி­யல் ரீதி­யாக தொந்­த­ரவு செய்­த­தா­கக் குற்­றம்­சாட்டி, அவர்­மீது நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஜன­வரி மாதம் போராட்­டம் நடத்­தி­னர்.

அப்­போது குத்­துச்­சண்டை வீராங்­கனை மேரி கோம் தலை­மை­யில் குழு அமைத்து பிரச்­சி­னைக்குத் தற்­கா­லி­கத் தீர்வு காணப்­பட்­டது. அதன்­பின்­ன­ரும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டா­த­தால், டெல்­லி­ ஜந்­தர் மந்­த­ரில் மல்­யுத்த வீராங்­க­னை­கள் கடந்த வாரம் முதல் மீண்­டும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

பாலி­யல் புகார் விவ­கா­ரத்­தில் இது­வரை அமை­தி காத்து வந்த டெல்லி காவல்­து­றை­யி­னர், உச்ச நீதி­மன்­றத்­தின் அறு­வு­றுத்­தலை அடுத்து, பிரிஜ் பூஷண் சிங் மீது இரு வெவ்வேறு தக­வல் அறிக் கைகளைப் பதிவு செய்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தான் யாருக்­கும் பாலி­யல் தொந்­த­ரவு தர­வில்லை என்று மறுத்­துள்ள அவர், இந்த விவ­கா­ரத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் கைப்­பா­வை­யாக வீராங்­க­னை­கள் செயல்­ப­டுவ தாகக் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.