இந்தியாவில் உள்ளூர் விமானப் பயணங்கள் புதிய உச்சம்

இந்தியாவில் உள்ளூர் விமானப் பயணங்கள் புதிய உச்சம்

2 mins read
6b431dd5-6053-4b8b-bfb0-4fdd202cf97a
-

புது­டெல்லி: கொவிட்-19 நெருக்­கடி­நி­லைக்­குப் பிறகு இந்­தி­யா­வில் உள்­ளூர் விமா­னப் போக்­கு ­வ­ரத்து சக்­கைப்­போடு போடு­வ­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு நாள்­தோ­றும் ஏறத்­தாழ 456,082 இந்­தி­யர்­கள் உள்­ளூர் அள­வில் விமா­னங்­களில் பயணம் செய்­கின்­ற­னர்.

ஆக அதி­க­மாக கடந்த ஏப்­ரல் மாதம் 30ஆம் தேதி­யன்று இந்­தி­யா­வில் 2,978 உள்­ளூர் விமா­னப் பய­ணங்­கள் பதி­வா­கின.

உள்­ளூர் விமா­னச் சேவை அதி­க­ரிப்பு இந்­தி­யா­வின் பெரு­ம­ள­வி­லான வளர்ச்­சி­யைக் காட்டு­வ­தாக இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா டுவிட்­டர் மூலம் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தும் அந்­நாட்­டில் விமா­னப் பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை ஏற்­றம் கண்­டுள்­ளது. இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் இந்­தி­யா­வில் உள்­ளூர் விமா­னச் சேவை­களை வழங்­கும் விமா­னங்­களில் 37.5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட பய­ணி­கள் பய­ணம் செய்­த­தா­கக் கூறப்­படு­கிறது. ஓராண்­டுக்கு முன்பு பதி­வான எண்­ணிக்­கை­யை­விட இது 51.7 விழுக்­காடு அதி­கம் என்று இந்­திய சிவில் விமா­னப் போக்­கு­வரத்து ஆணை­யம் வெளி­யிட்ட தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

"கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது விமா­னப் போக்­கு­வரத்து முடங்­கி­யது. பய­ணம் செய்ய வேண்­டும் என்று மக்­க­ளின் மன­தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த ஏக்­கத்­தின் வெளிப்­பாட்டைத் தற்­போது காண்­கி­றோம்," என்று பிபிசி செய்தி நிறு­வ­னத்­தி­டம் விமா­னப் போக்­கு­வ­ரத்து பகுப்­பாய்­வா­ளர் மார்க் மார்ட்­டின் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக விமானத்­தில் பய­ணம் செய்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ள­வில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக திரு மார்ட்­டின் கூறி­னார்.

இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில், அந்­நாட்­டின் விமா­னப் போக்­கு­வ­ரத்து இரு­ம­டங்கு அதிக வேகத்­தில் வளர்ச்சி அடைந்து வரு­வ­தாக அவர் விவ­ரித்­தார்.

இந்­தி­யா­வின் உள்­நாட்டு விமா­னச் சேவை மிகச் சிறப்­பான முறை­யில் மீண்டுவரும்­போ­தி­லும் விமா­னங்­க­ளுக்­குத் தேவை­யான எரி­பொ­ருள் விலை அதி­கரிப்பு, அமெ­ரிக்க டால­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்­திய ரூபா­யின் மதிப்பு இறக்­கம் கண்­டி­ருப்­பது, பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் விமான நிலை­யத்­தி­லேயே முடங்­கிக்­கி­டக்­கும் விமா­னங்­கள் போன்ற கார­ணங்­க­ளால் விமா­னப் போக்­கு­வரத்­துத் துறை தொடர்ந்து பாதிப்­புக்கு உள்­ளா­கிறது.

பிராட் அண்ட் விட்னி இயந்­தி­ரக் கோளாறு கார­ண­மாக இண்­டிகோ, கோஃபெர்ஸ்ட் போன்ற பிர­தான இந்­திய விமான நிறு­வ­னங்­க­ளுக்­குச் சொந்­த­மான 50க்கும் அதி­க­மான விமா­னங்­கள் ­பல மாதங்­க­ளாக முடங்­கிக் கிடப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் விமான நிறு­வ­னங்­க­ளுக்­குப் பில்­லி­யன் கணக்­கில் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.