அமைதி ஊர்வலத்தில் வன்முறை; இணையம் ரத்து; ஊரடங்கு அமல்

1 mins read
d55cddab-e217-4598-a846-8a252b38828f
-

இம்­பால்: இந்­தி­யா­வின் மணிப்­பூர் மாநி­லத்­தில் எதிர்ப்பு தெரி­விக்­கும் அமைதி ஊர்­வ­லத்­தில் வன்­முறை வெடித்­தது. மெய்தி சமூ­கத்­தி­னரை 'எஸ்டி' எனப்­படும் பட்­டி­யல் பழங்­கு­டி­யி­னர் பிரி­வில் சேர்ப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் நேற்று முன்­தி­னம் பழங்­கு­டி­யி­னர் அமைதி ஊர்­வ­லம் நடந்­த­போது வன்­முறை வெடித்­தது.

இதை­ய­டுத்து ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன் ராணு­வ­மும் அசாம் துப்­பாக்­கிப் படை­யி­ன­ரும் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். ஐந்து நாள்­க­ளுக்கு இணை­யச் சேவை­யும் முடக்­கப்­பட்­டுள்­ளது.

மணிப்­பூர் அனைத்து மாண­வர்­கள் அமைப்பு அமைதி ஊர்­வ­லத்­திற்கு அழைப்பு விடுத்­ததை அடுத்து அம்­மா­நி­லத்­தின் வெவ்­வேறு மலை மாவட்­டங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் பங்­கேற்ற ஊர்­வ­லம் நடந்­தது.

அப்­போது பழங்­கு­டி­யி­ன­ருக்­கும் பழங்­குடி அல்­லா­தோ­ருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில் இணை­யச் சேவையை முடக்க மாநில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

கல­வ­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 4,000 பேர் மீட்­கப்­பட்டு பாது­காப்­பான இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, மணிப்­பூ­ரில் அமை­தி­யை­யும் இயல்­பு­நி­லை­யை­யும் மீட்­டெ­டுக்க பிர­த­மர் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று ராகுல் காந்தி இந்த விவ­கா­ரம் குறித்து வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மணிப்­பூர் குத்­துச்­சண்டை வீராங்­கனை மேரி கோம் டுவிட்­ட­ரில் 'எனது மணிப்­பூர் மாநி­லம் பற்றி எரி­கிறது. தய­வு­செய்து உத­வி­டுங்­கள்' எனப் பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் ஆகி­யோ­ரைப் பதி­வில் குறிப்­பிட்­ட­வாறு கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.