லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனில் துஜானா (படம்) என்ற கொள்ளைக்கூட்டத்தான் காவல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீரட் நகரில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் அனில் துஜானாவைச் சுட்டுக் கொன்றதாக அறியப்படுகிறது.
கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட அனில் துஜானா மீது 62 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த மாதம் 10ஆம் தேதியன்று சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த அனில் துஜானா, கவுதம் புத் நகர் வழக்கில் தனக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
2017ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 160க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் உ.பி.யில் நடந்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

