புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகள் சரணாலயங்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
பறவையினங்களைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் நெடுஞ்சாலை ஓரமுள்ள நிலங்களைக் கைய கப்படுத்தி அவற்றில் பறவைகள் சரணாலயம், பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலை வழித்தட தொகுதிகளைச் சேர்ந்த எம்பிக்களிடம் தலா ஒரு சரணாலயத்தை அமைக்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

