படகு கவிழ்ந்து 22 பேர் பலி

2 mins read
c83105cd-c9a2-4cfd-98d2-1b3110263719
-

அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கான முக்கியக் காரணம் என தகவல்

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் சுற்­று­லாப் படகு கவிழ்ந்த விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஒன்­பது பேர் உட்­பட 22 சுற்றுலாப் பயணிகள் உயி­ரி­ழந்த நிலை­யில், மாய­மா­ன­வர்­க­ளைத் தேடும் பணி தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது.

கேரள மாநி­லம், மலப்­பு­ரம் மாவட்­டம், தூவல்­தீ­ரம் கடற்­க­ரை­யில் இருந்து நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட பய­ணி­க­ளு­டன் ஈர­டுக்கு சுற்­று­லாப் படகு ஒன்று ஞாயிற் றுக்­கி­ழமை இரவு சென்று கொண்­டி­ருந்­தது.

சற்று நேரத்­திற்­கெல்­லாம் தானூர் பகு­தி­யில் சென்று கொண்­டி­ருந்த போது, பட­கில் திடீ­ரென விரி­சல் ஏற்­பட்டு பலத்த சத்­தத்­து­டன் உடைந்து நொறுங்­கி­யதால் பய­ணி­க­ளு­டன் படகு கவிழ்ந்து விபத்­துக்­குள்­ள­ானது.

அல­றல் சத்­தத்­து­டன் கட­லில் பல­ரும் தத்­த­ளித்­த­னர்.

இதைப் பார்த்த அப்­ப­குதி மீன வர்­கள் காவ­லர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்­துக்கு விரைந்து வந்த மீட்­புக் குழு­வி­னர் உள்­ளூர் மீன­வர்­க­ளு­டன் நீரில் தத்­த­ளித்த பல­ரை­யும் மீட்­ட­னர்.

குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள் என பலர் மாய­மா­ன­தா­க­க் கூறப்­ப­டும் நிலையில், படகு விபத்­தில் ஐந்து குழந்­தை­கள் உள்­ளிட்ட 22 பேர் உயி­ரி­ழந்த தாகத் தக­வல் தெரிவிக்கிறது.

உயி­ருக்­குப் போரா­டிய நிலை­யில் மீட்­கப்­பட்ட பலர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இரண்­ட­டுக்­குப் பட­கில் மேல் அடுக்­கில் இருந்­த­வர்­கள் சிலர் காப்­பாற்­றப்­பட்ட நிலை­யில், கீழ்ப்­பகு­தி­யில் இருந்­த­வர்­கள் கட­லில் அடித்­துச் செல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் அஞ்­சப்­ப­டு­கிறது.

பட­கில் அதி­க­மா­னோர் பய­ணம் செய்­ததே விபத்­துக்­கான கார­ணம் என்­றும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடிய விடிய மீட்­புப் பணி தொடர்ந்த நிலை­யில், மாய­மா­ன­வர்­க­ளைத் தேடும் பணி தொடர்ந்து நடை­பெ­று­கிறது.

கேர­ளா­வில் சுற்­று­லாப் பட­குப் பய­ணம் மாலை 5 மணி வரை மட்­டுமே அனுமதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், விபத்­துக்­குள்­ளான படகு இரவு 7 மணி வரை கட­லில் பய­ணம் மேற்­கொண்­டது குறித்து விசா­ர­ணை­யும் நடந்து வரு­வ­தாகக் காவலர்கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னி­டையே, உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு இரங்­கல் தெரி­வித்­துள்ள பிர­த­மர் நரேந்­திர மோடி, உயி­ரி­ழந்த ஒவ்­வா­ரு­வ­ரின் குடும்­பத்­துக்­கும் பிர­த­ம­ரின் நிவா­ரண நிதி­யில் இருந்து தலா 2 லட்­சம் ரூபாய் வழங்­கப்­படும் என்று அறி­வித்­துள்­ளார்.

அதி­பர் திரௌ­பதி முர்மு, காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் ஆகி­யோரும் இரங்­கல் தெரி­வித்துள்ள­னர்.