தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் 23,000 பேர் மீட்பு; விமானக் கட்டணங்கள் உயர்வு

2 mins read
a96ba779-c87f-4fd4-86bd-c6cb69cf739d
-

இம்­பால்: வடகிழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரில் ஒரு வார­மாக நீடித்து வந்த பதற்­றம் தணிந்­ததை அடுத்து, உண­வுப் பொருள்­கள், மருந்­து­கள் உள்­ளிட்ட அத்­தியா வசி­யப் பொருள்­களை வாங்க ஊர­டங்கு உத்­த­ரவு சில மணி நேரம் தளர்த்­தப்­பட்­டது.

இத­னால் இயல்பு வாழ்க்கை மெல்ல வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனி­னும், வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இருந்து இது­வரை 23,000 பேர் மீட்­கப்­பட்டு ராணுவ முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்டு உள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட பெண்­கள் போராட்­டம் நடத்தி, சிறு­கச் சிறு­கச் சேமித்து வாங்­கிய பொருள்­கள் அனைத்­தும் தீவைத்து எரிக்­கப்­பட்­ட­தாக வேத­னைப்­பட்­ட­னர். வாழ்­வா­தா­ரம் இழந்­துள்ள தங்­க­ளுக்கு உத­வு­மாறு அதி­கா­ரி­க­ளி­டம் கதறி அழுது கேட்­டுக்­கொண்­டது நெஞ்சை உலுக்கியது.

"மணிப்­பூர் விவ­கா­ரத்­தில் மத்­திய அரசு பிடி­வா­த­ம் காட்ட வில்லை. மணிப்­பூர் மக்­களும் இந்­தி­யர்­களே. அவர்­க­ளது பிரச்­சி­னைகளுக்கு அமை­தி­யான முறை­யில் தீர்வு காண மத்திய, மாநில அர­சு­க­ள் தயாராக உள் ளன," என்று வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளுக்­கான அமைச்­சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

'இந்­தியா டுடே' ஊட­கத்­துக்கு மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா அளித்த பேட்­டி­யில், "மணிப்­பூர் சம்பவம் குறித்து அர­சாங்­கம் நல்ல முடிவை எடுக்­கும். அதுவரை யாரும் அச்­சப்­ப­டா­மல் அமைதி காக்க வேண்­டும்," என்று கூறி­யுள்­ளார்.

கட்டணம் ஆறு முதல் எட்டு மடங்கு அதிகரிப்பு

மகா­ராஷ்­டிரா, ஆந்­திரா, தெலுங்­கானா, ஹரி­யானா உள்ளிட்ட மாநில அர­சு­கள் மணிப்­பூ­ரில் சிக்­கி­யுள்ள மாண­வர்­கள், குடிமக்­களை அங்­கி­ருந்து வெளியேற்றி வரு­கின்­றன.

மகா­ராஷ்­டிரா, ஆந்­தி­ரப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­கள் சிறப்பு விமா­னங்­களுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன. ராஜஸ்­தான் அர­சாங்­கம் 125 ராஜஸ்­தானியர்­களை இம்­பா­லில் இருந்து மீட்க உள்ளது. அவர்­களில் பெரும்­பாலானோர் மாண­வர்­கள். பிற மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 240 மாண­வர்­கள் மணிப்பூரில் இருந்து வெளி­யேறிவிட்­ட­னர். இம்­பால்-கோல்­கத்தா விமா­னக் கட்­ட­ணம் ரூ.22,000 முதல் ரூ.30,000ஆக வழக்­க­த்தைவிட 6 முதல் 8 மடங்கு விலை அதி­க­ரித்­துள்­ளது. அத்துடன், இம்­பா­லில் இருந்து வெளிமாநி­லங்­க­ளுக்­குச் செல்­லும் அனைத்து விமா­னங்­களும் அடுத்த சில நாள்­களுக்கு முழு­மை­யாக முன்­ப­திவு செய்­யப்­பட்­டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.