பஞ்சாப் பொற்கோயில் அருகே மூன்றாவது முறை குண்டுவெடிப்பு

பஞ்சாப் பொற்கோயில் அருகே மூன்றாவது முறை குண்டுவெடிப்பு

1 mins read
9bc13de9-0abb-4386-9a6a-7ae10d6ea648
-

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள சீக்கியர் களின் புனிதத் தலமான பொற் கோயில் அருகே நேற்று இரவு ஒரு மணி அளவில் மீண்டும் மர்மப்பொருள் பயங்கரச் சத்தத் துடன் வெடித்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவர் கெளரவ் யாதவ் தெரி வித்துள்ளார்.

அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அவர், பட்டாசு தயாரிக்கும் பொருள் களைக் கொண்டு குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ள தாகவும் கூறியுள்ளார்.

முதல் வெடிப்பு மே 6ஆம் தேதி­யும் இரண்­டா­வது வெடிப்பு கடந்த 8ஆம் தேதி­யும் நடந்­தன.

நேற்று இரவு நடந்த குண்­டு­வெடிப்புச் சம்­ப­வம் பிர­ப­ல ­சுற்­று­லாத் தல­மான பொற்­கோ­யி­லுக்கு அரு­கி­லுள்ள ஹெரி­டேஜ் தெரு­வி லிருந்து இரண்டு கிலோ­மீட்­டர் தொலை­வில் நடை­பெற்­றுள்­ளது.

தேசிய புல­னாய்வு அமைப்பு (என்­ஐஏ) அதி­கா­ரி­களும் பஞ்­சாப் காவலர்களும் குண்­டு­வெ­டிப்பு நடந்த இடத்­தில் கிடைத்த தட­ய­வி­யல் மாதி­ரி­க­ளைச் சேக­ரித்து விசா­ரணை நடத்திவரு­கின்­ற­னர்.

கடந்த ஐந்து நாள்களில் தொடர்ந்து மூன்றாவது முறை யாக இதுபோல் பொற்கோவிலுக்கு அருகில் மர்மப் பொருள்கள் வெடித்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.