பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மதன் சிங், 30, அவரது மனைவி சுனிதா தேவி, 27. பிஜ்னோரில் உள்ள அஸ்பா பாத் சாமன் என்ற கிராமத்தில் விவசாய வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களது மூன்று வயது மகள் காயத்ரி அருகில் விளையாடிக் கொண்டி ருந்தபோது, சிறுத்தை ஒன்று அவள் மீது பாய்ந்து, இழுத்துச் செல்ல முயன்றது.
இதைக்கண்ட பெற்றோர் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மகளைக் காப்பாற்ற போராடினர். மதன்சிங் சிறுத்தை யைக் கழியால் தாக்கினார், தாய் தன் காட்டுக் கூச்சல் போட்டார். குழப்பமடைந்த விலங்கு அங்கிருந்து தப்பியோடியது. காயமடைந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயி சமன் சிங் கூறுகை யில், "அறுவடைக் காலமாக இருப்பதால் விவசாயிகள் அதிக நேரம் வயல்வெளிகளில் செல விடுகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 13 கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ள னர். ஆனால் அதிகாரிகள் எங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். இதுபோன்ற அலட்சியம் தொடர்ந்தால், ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

