'ஆளுநரை விட மாநில அரசுக்கே அதிக அதிகாரம்'

1 mins read
eadc6676-afe4-4828-bf5a-dc147d3d408b
-

புது­டெல்லி: மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாநில அர­சுக்கே அதிக அதி­கா­ரம் உள்­ளது என­வும் மாநில அர­சின் முடி­வுக்கு ஆளு­நர் கட்­டுப்­பட்டு நடக்­க­வேண்­டும் என­வும் உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­தரவிட்­டுள்­ளது.

டெல்­லி­யில் அரசு அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தில் யாருக்கு அதி­கா­ரம் என்­பது குறித்­தான வழக்­கில், தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் உள்­ளிட்ட ஐவர் கொண்ட நீதி­ப­தி­கள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்­கி­யது.

இது­கு­றித்த தீர்ப்பை சந்­தி­ர­சூட் வாசித்­த­போது, டெல்­லி­யில் ஐஏ­எஸ் அதி­கா­ரி­களை நிய­மிக்க ஆளு­ந­ரை­விட மாநில அர­சுக்கே அதி­கா­ரம் உள்­ளது.

மக்­க­ளால் தேர்வு செய்­யப்­பட்ட அர­சின் கையில்­தான் உண்­மை­யான நிர்­வாக அதி­கா­ரம் இருக்­க­வேண்­டும். மக்­கள் தேர்ந்­தெ­டுத்த அர­சுக்கு அதி­கா­ரி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் அதி­கா­ரம் வழங்­கப்­ப­டா­தது தவறு. டெல்லி அர­சின் அன்­றாட நட­வ­டிக்­கை­கள் அனைத்­தை­யும் மேற்­கொள்ள மாநில அர­சுக்கே அதி­கா­ரம் உள்­ளது. டெல்­லி­யில் ஆளு­நரைவிட முதல்வருக்கே அதி­கா­ரம் உள்ளது. துணைநிலை ஆளு­ந­ருக்கே அதி­கா­ரம் என்ற மத்­திய அர­சின் வாதம் நிரா­க­ரிக்­கப்­பட்­டதாக தெரிவித்தார்.