பயங்கரவாதத்துக்கு நிதியுதவி: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

1 mins read
2c82fa1a-79d4-4a3e-95d3-d2a90c805ab7
-

ஸ்ரீந­கர்: காஷ்­மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்­லாமி பயங்­க­ர­வாத இயக்­கத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்­திய அரசு தடை செய்­தது. சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள் தடுப்புச் சட்­டத்­தின்­கீழ் (உபா) இந்த தடை விதிக்­கப்­பட்­டது.

ஐந்­தாண்­டு­க­ளுக்­குத் தடை உத்­த­ரவு அம­லில் இருக்­கும். இதற்­கி­டையே, தடை செய்­யப்­பட்ட ஜமாத் இ இஸ்­லாமி இயக்­கம், பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­யு­தவி செய்து வரு­வ­தாக தேசிய புல­னாய்வு முக­மைக்கு (என்.ஐ.ஏ.) ரக­சிய தக­வல் கிடைத்­தது.

எனவே, அது­தொ­டர்­பாக என்.ஐ.ஏ. அதி­கா­ரி­கள் நேற்று காஷ்­மீ­ரில் அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.

பட்­கம், பார­முல்லா ஆகிய மாவட்­டங்­களில் 11 இடங்­களில் சோதனை நடந்­தது.

காஷ்­மீ­ரில், ஜி20 நாடு­கள் அமைப்­பின் சுற்­று­லாப் பணிக்­குழு கூட்­டம் வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்­கிறது. அதை­யொட்டி, பயங்­க­ர­வா­தி­கள், அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­கள், நிதி­யு­தவி செய்­ப­வர்­கள் ஆகி­யோ­ருக்கு எதி­ரான வேட்­டையை புலனாய்வு முகமை முடுக்கி விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், 2021 நவம்­ப­ரில் கைப்­பற்­றப்­பட்ட கள்ள நோட்­டு­கள் தொடர்­பில் மும்­பை­யில் நேற்று முன்­தி­னம் அலு­வ­ல­கங்­கள், வீடு­கள் என ஆறு இடங்­களில் என்­ஐஏ அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­து.