நூறாயிரம் ஆந்திர விவசாயிகளுக்கு நிலப்பட்டா

நூறாயிரம் ஆந்திர விவசாயிகளுக்கு நிலப்பட்டா

1 mins read
e6109658-f091-4d60-bcab-2320dea9bcf7
-

அம­ராவதி: ஆந்­தி­ரா­வில் ஏறத்­தாழ நூறா­யி­ரம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச நிலப்­பட்­டாக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

12 ஆண்­டு­க­ளுக்கு மேல் நிலத்தை அனு­ப­வித்து வரும் விவ­சா­யி­க­ளுக்கு அந்த நிலத்­துக்­கான பட்­டாவை வழங்­கு­வது என ஆந்­திர அரசு அண்­மை­யில் முடிவு செய்­தது. இதற்­காக அம்­மா­நில சட்­டப்­பே­ர­வை­யில் சிறப்பு மசோதா நிறை­வேற்­றப்­பட்­டது.

அதன் பின்­னர் நிலப்­பட்­டாவை பெறு­வ­தற்கு தகு­தி­யுள்ள விவ­சாயி­கள் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர். ஆங்­கி­லே­யர் காலத்­தில் இருந்தே சரி­யான உரி­மை­யா­ளர் அறி­யப்­ப­டாத நிலங்­க­ளாக ஆந்­தி­ரா­வில் லட்­சக்­க­ணக்­கான ஏக்­கர் நிலங்­கள் உள்­ளன. அவை 'புள்ளி­யி­டப்­பட்ட நிலங்­கள்' என வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அந்த நிலங்­க­ளுக்­கான பட்­டாக்­கள்­தான் தற்­போது விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

இதற்­கான நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி, பட்டா வழங்­கப்­பட்ட நிலங்­க­ளின் மதிப்பு குறைந்­த­பட்­சம் ரூ.20 ஆயி­ரம் கோடி­யாக இருக்­கும் என்­றார்.

இதனால் 97,471 குடும்பங்கள் பயனடையும் என்றும் பத்திரப்பதிவு கட்டணமாக மட்டுமே ரூ.8,000 கோடி செலவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.