ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்: பணிப்பெண்களை தாக்கியவருக்குத் தடை

ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்: பணிப்பெண்களை தாக்கியவருக்குத் தடை

2 mins read
458baba6-51a5-4d7d-b9bc-e8c91e71245d
-

புது­டெல்லி: ஏர் இந்­தியா விமா­னத்­தில் பணிப்­பெண்­க­ளைத் தாக்­கிய ஆட­வ­ருக்கு அந்­நி­று­வன விமா­னங்­களில் பய­ணம் மேற்­கொள்ள இரண்­டாண்டு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்­ரல் 10ஆம் தேதி­யன்று டெல்­லி­யில் இருந்து லண்­ட­னுக்கு ஏர் இந்­தியா விமா­னம் இயக்­கப்­பட்­டது. அந்த விமா­னத்­தில் ஜஸ்­கி­ரத் சிங் பட்டா என்ற 25 வயது இளை­ய­ரும் பய­ணம் மேற்­கொண்­டார்.

விமா­னம் நடு­வா­னில் பறந்து கொண்­டி­ருந்­த­போது, திடீ­ரென தனது இருக்­கை­யில் இருந்து எழுந்த அவர், விமா­னத்­தின் கதவைத் திறக்க முயன்­றதாகத் தெரி­கிறது.

இதைக் கண்டு பத­றிப்­போன விமான பணிப்­பெண்­கள் இரு­வர் அவரை தடுத்­த­னர். ஆத்­தி­ர­மடைந்த ஜஸ்­கி­ரத் சிங் விமான ஊழி­யர்­களை ஏசி­ய­து­டன், அவ்­விரு பணிப்­பெண்­க­ளை­யும் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து மற்ற பய­ணி­களின் உத­வி­யோடு அவர் கட்­டுப்­படுத்­தப்­பட்­டார். இதுதொடர்பாக ஏர் இந்­தியா நிறு­வ­னம் டெல்லி காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளது. மேலும் இச்­சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட ஏர் இந்­தியா நிறு­வ­னம், ஜஸ்­கி­ரத் சிங் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஏர் இந்­தியா விமா­னங்­களில் பய­ணம் செய்ய தடை விதித்­துள்­ளது.

ஏர் இந்­தியா நிறு­வ­னத்­துக்கு ரூ.30 லட்­சம் அப­ரா­தம்

இதற்­கி­டையே மற்­றொரு சம்­ப­வத்­தில் விமா­னி­யின் அறை­யில் பெண்ணை அனு­ம­தித்த விவ­கா­ரம் தொடர்­பாக ஏர் இந்­தியா நிறு­வ­னம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட விமா­னி­யின் உரி­மம் ரத்து செய்­யப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த பிப்­ர­வரி 27ஆம் தேதி துபா­யில் இருந்து டெல்லி வந்த விமா­னத்­தில் அதன் விமானி, தனது தோழி ஒரு­வரை விமா­னி­க­ளின் அறை­யில் (காக்­பிட்) அமர வைத்து இருந்­தார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம், பாது­காப்பு விதி­மீ­றலை கார­ணம் காட்டி ஏர் இந்­தியா நிறு­வ­னத்­துக்கு ரூ.30 லட்­சம் அப­ரா­தம் விதித்­துள்­ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.