கேரளா கடற்பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கேரளா கடற்பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
c2317fe9-0763-48a1-8f36-ddc494a28293
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­ மாநி­லத்­தின் கொச்­சி­யில் 2,500 கிலோ மதிப்­புள்ள போதைப் பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய் (சுமார் 1.45 பில்லியன் டாலர்).

கொச்சி அருகே கடற்­ப­கு­தி­யில் போதைப்­பொ­ருள் கடத்­தப்­ ப­டு­வ­தாக தக­வல் கிடைத்­த­தால் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு, இந்­திய கடற்­ப­டை­யு­டன் இணைந்து அதி­ர­டிச் சோதனை நடத்­தி­யது.

அப்­போது அவ்­வ­ழி­யாக வந்த கப்­பலை மறித்து சோதனை மேற்­கொள்­ளப்­பட்­ட­தில் சுமார் 2,500 கிலோ மெத்­தாம்­பீ­ட­மைன் எனும் போதைப்­பொ­ருள் இருப்­பது கண்டுபி­டிக்­கப்­ப­பட்­டது.

இதன் தொடர்­பில் பாகிஸ்­தா­னைச் சேர்ந்த ஒரு­வரை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர். ஈராக்­கி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இந்த போதைப்­பொ­ருள் கடத்­தப்­ப­ட­வி­ருந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர். இது, இது­வரை கைப்­பற்­றப்­பட்ட மிகப்­பெ­ரிய அள­வி­லான போதைப்­பொ­ருள் என்று போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வின் துணை இயக்­கு­நர் ஜென­ரல் சஞ்­சய் குமார் சிங் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து கடல் வழி­யா­கக் கடத்­தப்­படும் போதைப் பொருளை இலக்­கா­கக்­கொண்ட 'சமுத்­ரா­குப்தா' நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக இந்­தச் சோதனை நடத்­தப்­பட்­டது என்று அவர் தெரி­வித்­தார். இந்த நட­வ­டிக்­கை­யின்­கீழ் இது­வரை 3,200 கிலோ மெத்­தாம்பீட­மைன், 500 கிலோ கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.