தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்னையர் தினத்தில் தாய் ஆனந்தக் கண்ணீர்

1 mins read
151fdb98-ce3d-4b85-864a-2000189cdd56
-

புது­டெல்லி: அன்­னை­யர் தினம் உல­கெங்­கும் கடந்த 14ஆம் தேதி ஞாயி­றன்று கொண்­டா­டப்­பட்­டது.

இத்­தி­னத்­தன்று இண்­டிகோ விமா னத்­தில் எடுக்­கப்­பட்ட காணொளி சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பர­வி­ வருகிறது.

அதில், இண்­டிகோ விமானத்­தில் தான் பணிப்­பெண்­ணா­கப் பணி­யாற்றுவதாக நபிரா சம்சி என்­ப­வர் தன்னை அறி­மு­கம் செய்­து­ பேச ஆரம்பிக்­கி­றார்.

அதன்பின், அதே விமானத்­தில் பணிப்­பெண்­ணா­கப் பணி­யாற்­றும் தனது தாயார் ராம் சம்­சியை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறி அவரை அழைக்­கி­றார்.

தொடர்ந்து, தனது அம்மா ராம் சம்சி கடந்த ஆறு ஆண்டு­ க­ளாக விமானப் பணியாளர்களுள் ஒருவராக வேலை செய்­வதை பார்த்து வரு­வ­தா­க­வும் அவர் தனக்கு ஊக்­கம் அளிப்பதில் முன்­மா­தி­ரி­யாக விளங்­கு வதாகவும் கூறுகிறார்.

தானும் ஒரு விமா­னப் பணிப்­பெண்ணாக அவருக்கு முன்பாக நிற்­ப­தில் பெருமைப்படுவ­தாகக் கூறி தன் அம்மாவுக்கு அன்­போடு முத்­த­மி­டு­கி­றார். அப்­போது தாயாரின் கண்­களில் இருந்து ஆனந்­தக் கண்­ணீர் வழி­கிறது.

நபிரா அறி­விப்பை முடித்­த­தும் பய­ணி­கள் இரு­வ­ரை­யும் கைத்­தட்டி பாராட்­டு­கின்­ற­னர். இக் காணொளி அதி­க­மான பார்வை களைக் குவித்துவரு­கிறது.