தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் 25,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

1 mins read
eda62b15-f798-4d27-a7d0-7807e36c9dd0
-

ஹைத­ரா­பாத்: 'ஆப்­பிள்' மின்­ன­ணுக் கரு­வி­க­ளைத் தயா­ரிக்­கும் ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னம் இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லத்­தில் முதற்­கட்­ட­மாக 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்­கும் அதி­க­மான தொகையை முத­லீடு செய்­ய­வுள்­ளது.

இதன்­மூ­லம் 25,000 நேரடி வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­படும் என்று அம்­மா­நி­லத்­தின் தக­வல் தொழில்­நுட்ப, மின்­ன­ணு­வி­யல் மற்­றும் தொடர்­புத் துறை­க­ளுக்­கான அமைச்­சர் கே.டி.ராம­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

'கேடி­ஆர்' என அழைக்­கப்­படும் அவர், தெலுங்­கானா முதல்­வர் கே.சந்­தி­ர­சே­கர ராவின் மகன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தலை­ந­கர் ஹைத­ரா­பாத்தை ஒட்டி, ரங்க ரட்டி மாவட்­டத்­தில் கொங்­கர் கலான் பகு­தி­யில் ஃபாக்ஸ்­கான் ஆலை நிறு­வப்­படும். புதிய ஆலை உல­கத்­த­ரம் வாய்ந்த பொருள்­களை உற்­பத்தி செய்­யும் திறன்­கொண்­ட­தாக விளங்­கும் என்­றும் அந்த ஆலை ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னத்­தின் உல­க­ளா­விய விரி­வாக்க உத்­தி­யில் ஒரு மைல்­கல் என்­றும் தெலுங்­கானா அர­சாங்­க­மும் ஃபாக்ஸ்­கான் நிறு­வ­ன­மும் ஒரு அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளன.

உல­கின் முன்­னணி ஐஃபோன் தயா­ரிப்­பா­ள­ராக ஃபாக்ஸ்­கான் விளங்­கு­கிறது. தைவா­னின் தைப்பே நக­ரில் அதன் தலை­மை ­ய­கம் செயல்­பட்டு வரு­கிறது.அதன் பெரும்­பா­லான ஆலை­கள் சீனா­வில் அமைந்­துள்­ளன. இந்­நி­லை­யில், அமெ­ரிக்கா-சீனா வுக்கு இடை­யி­ல் மோதல் போக்கு அதி­க­ரித்­துள்­ள­தால் ஃபாக்ஸ்­கான் இந்­தி­யா­வில் முத­லீடு செய்ய ஆர்­வம் காட்­டி­வ­ரு­கிறது.