முதல்வர் நாற்காலிக்கு இரு தலைவர்கள் கடும் போட்டி

முதல்வர் நாற்காலிக்கு இரு தலைவர்கள் கடும் போட்டி

2 mins read
362b5861-6bb1-4da3-974c-e01a340a1992
-

கர்நாடகா அமைச்சரவை வரும் 18ஆம் தேதி பதவியேற்பு; ஐந்து வாக்குறுதிகளும் நிறைவேறும்

பெங்­க­ளூரு: கர்­நா­டக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அமோக வெற்றி­பெற்­றுள்ள காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி­ய­மைக்­கப் போவது உறு­தி­யா­கி­யுள்ள சூழ­லில், முதல்­வர் நாற்­கா­லி­யைக் கைப்­பற்ற சித்­த­ரா­மை­யா­வுக்­கும் டி.கே.சிவ­க் குமாருக்­கும் இடையே கடும்­போட்டி நில­வு­கிறது.

இவர்­களில் ஒருவரை முதல்வ ராகத் தேர்ந்­தெ­டுக்­கும் அதி­கா­ரம் காங்­கி­ரஸ் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்­கே­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அமைச்­ச­ரவை வரும் 18ஆம்­தேதி பத­வி­யேற்­கும் என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரிவித்­துள்­ளன.

கர்­நா­ட­கா­வின் அடுத்த முதல்­வர் யார் என்ற இழு­பறி நீடிக்­கும் நிலை­யில், நேற்று பிற்­ப­கல் சிறப்பு விமா­னம் மூலம் டெல்­லிக்­குச் சென்­றார் முன்னாள் முதல்­வர் சித்­த­ரா­மையா.

நேற்று தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடிய டி.கே. சிவக்­கு­மார் கூறு­கை­யில், "நான் டெல்லி செல்­ல­வில்லை. என்ன செய்ய வேண்­டுமோ அவை அனைத்­தை­யும் செய்­து­விட்­டேன். இன்று எனக்குப் பிறந்­த­நாள் என்­ப­தால் விழாக்­கள், பூசை களில் பங்­கேற்­ப­தற்­காக பெங்­க­ளூ­ரு­வில் இருக்­கி­றேன். புதிய முதல்வர் யார் என்ற முடிவை டெல்லி தலை­மை­யி­டம் விட்­டு­விட்­டோம், அவர்­கள் முடிவு எடுப்­பார்­கள்," என்று கூறி­னார்.

சித்­த­ரா­மை­யா­வின் மகன் யதீந்­திரா சித்­த­ரா­மையா, தனது தந்­தைக்­குத்­தான் முதல்­வர் பதவி வழங்­க­வேண்­டும் என்று வலி­யுறுத்தி வரு­கி­றார்.

இரு­வ­ரின் ஆத­ர­வா­ளர்­களும் சுவ­ரொட்­டி­கள் மூலம் தங்­கள் விருப்­பத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அனு­ப­வம் வாய்ந்த சித்த ராமையா முதல்­வ­ராக வர­வேண்­டும் என அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலை­யில், இந்த வெற்­றிக்கு மூலக்­கா­ர­ணமே சிவக்­கு­மா­ரின் கடும் உழைப்­பு­தான் என அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். கட்­சிக்­காக தியா­கங்­கள் செய்த சிவக்­கு­மா­ருக்கு உயர்ந்த பதவி வழங்­க­வேண்­டும் எனவும் அவர்­கள் வலி­யு­றுத்தி உள்ள­னர்.

இவர்­களில், சித்­தரா­மையா முதல்­வ­ராகத் தேர்வு செய்­யப்­பட்­டால், டி.கே.சிவக்­கு­மார், எம்.பி. பாட்­டீல், பர­மேஸ்­வரா ஆகிய மூவ­ரை­யும் துணை முதல்­வ­ராக நியமிக்க காங்­கி­ரஸ் மேலி­டம் திட்­ட­மிட்­டுள்ளதாக­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னி­டையே, புது­டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, கர்­நா­ட­கத் தேர்­த­லின் போது அறிவிக்­கப்­பட்ட ஐந்து வாக்­கு­று­தி­களும் நிறை­வேற்­றப்­படும் என உறுதி கூறியுள்ளார்.