வறுமை; கையில் காசில்லை; குழந்தையின் சடலத்துடன் 200 கி.மீ. பேருந்தில் வந்த தந்தை

1 mins read
31285537-2221-4a9e-9a8a-77add43d7c20
-

கோல்­கத்தா: அவ­சர சிகிச்சை வாக­னத்­தைப் பயன்­ப­டுத்து வதற்­குப் போதிய பணம் இல்­லாத கார­ணத்­தால், மேற்கு வங்­கத்­தில் ஐந்து மாதக் குழந்­தை­யின் சட­லத்ைத 200 கி.மீ. தூரம் வரை பேருந்திலேயே எடுத்­துக்­கொண்டு வந்த அவ­லம் நடந்­துள்­ளது.

மேற்கு வங்க மாநி­லம், உள்ள கலி­யா­கஞ்ச் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் அஷிம் தேப்­சர்மா. இவ­ரது 5 மாதக் குழந்­தைக்கு உடல்­ந­லக் குறைவு ஏற்­பட, சிலி­குரி பகு­தி­யில் உள்ள நார்த் பெங்­கால் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை அளித்­துள்­ளார். ஆறு நாள்­கள் ஆன பின்­ன­ரும் குழந்­தை­யின் உடல்­நி­லை­யில் எந்த முன்­னேற்­ற­மும் ஏற்­ப­டா­மல் மருத்­து­வ­ம­னை­யி­லேயே உயி­ரி­ழந்­தது.

மருத்­து­வ­ம­னைக்­கும் அஷிம் வீடு இருக்­கும் பகு­திக்­கும் சுமார் 200 கி.மீ. தூரம் என்­ப­தால், குழந்­தை­யின் உடலை எடுத்­துச் செல்ல அவ­சர சிகிச்சை வாக னத்தை அணு­கி­யுள்­ளார்.

ஆறு நாள் சிகிச்­சை­யில் அஷிம் ரூ.16,000 செலவு செய்த நிலை­யில், அவ­ரி­டம் வேறு பணம் இல்லை. அவ­சர சிகிச்சை வாகன ஓட்­டு­நர்­கள் ரூ.8,000 கொடுத்­தால்­தான் வர­மு­டி­யும் என்று கறாராகக் கூறி­யுள்­ள­னர். எனவே, குழந்­தையின்­ உடலை ஒரு பையில் வைத்து மறைத்து 200 கி.மீ. தூரம் பேருந்­தி­லேயே அஷிம் கொண்டு வந்­துள்­ளார்.

இந்த அதிர்ச்சி சம்­ப­வம் சமூக ஊடகங்களில் பரவியது.