தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூர் கலவரம்: பாதிக்கப்பட்ட 5,800 பேர் மிசோரமில் தஞ்சம்

2 mins read
edc47aea-7d0b-4588-b6ed-89eb40782dd8
-

இம்­பால்: மணிப்­பூ­ரில் கல­வ­ரத்­தால் ஏரா­ள­மா­னோர் அண்டை மாநி­ல­மான மிசோ­ர­மில் தஞ்­ச­மடைந்து உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வட­கி­ழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரில் மேதே, குக்கி சமு­தாய மக்­க­ளி­டையே கடந்த மே 3ஆம் தேதி மிகப்­பெ­ரிய கல­வ­ரம் ஏற்­பட்­டது. அந்தக் கல­வ­ரத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 73 ஆக உயர்ந்­துள்­ளது.

நூற்­றுக்­க­ணக்­கா­னோர் காய­மடைந்து உள்­ள­னர். ஆயி­ரக்­க­ணக்­கான வீடு­கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்­ளன.

ராணு­வம், துணை ராணு­வம் சார்­பில் அமைக்­கப்­பட்­டுள்ள நிவா­ரண முகாம்­களில் 45,000க்கும் அதிகமானோர் தங்க வைக்­கப்­பட்டு உள்­ள­னர்.

மணிப்­பூ­ரில் வசிப்­ப­தால் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம் என்ற அச்­சத்­தால் குக்கி, சின், மிசோ சமூ­கங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 5,800 பேர் மிசோ­ரம் மாநி­லத்­தில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

அவர்­கள் அந்த மாநி­லத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள பல நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். சொந்த மாநி­லத்­திற்­குத் திரும்­பிச்­செல்ல அவர்­கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ­லில் மணிப்­பூ­ரின் மலைப்­ப­கு­தி­களில் வசிக்­கும் குக்கி உள்­ளிட்ட சமு­தாய மக்­க­ளுக்­காக தனி மாநி­லம் அமைக்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். இதில் 7 பேர் ஆளும் பார­திய ஜனதா கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசிய மணிப்­பூர் முதல்­அமைச்­சர் பிரேன் சிங், "மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவின் அறி­வு­ரை­யின்­படி மாநி­லத்­தில் அமை­தியை நிலை­நாட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்.

"இதற்­காக அமைதி நல்­லி­ணக்­கக் குழுக்­கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. போராட்­டங்­களைக் கைவிட்டு மக்­கள் அமைதி காக்க வேண்­டும். அனைத்­துத் தரப்­பி­ன­ரின் பாது­காப்­பும் உறுதி செய்­யப்­படும்.

"மணிப்­பூர் மாநி­லத்­தைப் பிரித்து புதிய மாநி­லம் உரு­வாக்­கும் கோரிக்­கையை ஒரு­போ­தும் ஏற்க முடி­யாது,'' என்று தெரி­வித்­தார்.

கடந்த சனிக்­கி­ழமை சூரா­சந்த்­பூர் மாவட்­டத்தில் உள்ள தோர்­பங் என்னும் சிற்றூரில் மேதே மக்­கள் வாழும் பகு­தி­யில் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தோடு பல இடங்­களில் வீடு­க­ளுக்குத் தீவைக்­கப்­பட்­டது.

சனிக்­கி­ழமை இரவு நடந்த துப்­பாக்­கிச் சூடு வன்­மு­றைக்­குப் பிறகு பதற்­ற­மான பகு­தி­க­ளுக்கு மேலும் ராணுவ வீரர்­கள் அனுப்­பப்­பட்­ட­னர்.

அந்தச் சிற்றூரில் வசிக்­கும் நூற்­றுக்­க­ணக்­கான மக்­கள் அரு­கில் உள்ள நிவா­ரண முகாம்களில் பாது­காப்­பாக தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.