தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6 மாநிலங்களில் அதிகாரிகள் 122 இடங்களில் சோதனை

1 mins read
9ec8a292-1548-4272-ab80-0a199cd3c598
-

பயங்கரவாதம், போதைப்பொருள், குண்டர் கும்பல்களை நசுக்க அதிரடி முயற்சி

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தேசிய புல­னாய்வு முகவை (என்­ஐஏ) நேற்று ஆறு மாநி­லங்­களில் 122 இடங்­களில் சோத­னை­களை நடத்­தி­யது.

பாகிஸ்­தான், கனடா உள்ளிட்ட வெளி­நா­டு­களில் தளம் கொண்டு செயல்­படும் பயங்­க­ர­வாத குழுக்­கள், போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­கள், குண்­டர்­கும்­பல் பேர்­வழி­கள் ஆகி­யோ­ருக்கு இடையே தொடர்­பு­கள் இருப்­ப­தாக கூறப்­படு­வ­தன் பேரில் அந்தச் சோதனை­களை அதி­காரி­கள் நடத்­தி­னார்­கள்.

அரி­யானா, பஞ்­சாப், ராஜஸ்­தான், உத்­தி­ரப்­பி­தே­சம், உத்­ர­காண்ட், மத்­தி­யப்­பி­ர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் சந்­தே­கத்­திற்கு இட­மான சில வீடு­களில் இந்த முக­வை­யின் அதி­கா­ரி­கள் அதி­காலை 4 மணி முதலே சோதனை­களை மேற்­கொண்­ட­னர்.

இந்த ஆறு மாநி­லங்­க­ளி­லும் தளம் கொண்டு செயல்­படும் குண்­டர் கும்­பல்­க­ளை­யும் சட்­ட­வி­ரோத கட்­ட­மைப்­பு­க­ளை­யும் துடைத்­தொ­ழிப்­ப­தற்­காக சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக இந்த முகவை தெரி­வித்­தது.

பயங்­க­ர­வாத கட்­ட­மைப்­பு­க­ளை­யும் அந்த அமைப்­பு­க­ளுக்கு பணம் கிடைக்­கக்­கூ­டிய வழி­களை­யும் ஆத­ரவு அளிக்­கும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் நிலை­கு­லை­யச் செய்­யும் நோக்­கத்­தில் இந்த முகவை தொடர்ந்து பல கோணங்­க­ளி­லும் புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­வ­தாக அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

கன­டா­வைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் லாண்டா என்ற லக்­பிர் சிங், பாகிஸ்­தானை தள­மா­கக் கொண்டு செயல்­படும் ஹர்­விந்­தர் சிங் ரிண்டா, அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் குர்­பந்­வாந்த் சிங் பானு ஆகிய குண்­டர்­கும்­பல் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக சென்ற ஆண்டு ஆகஸ்­டில் இந்த முகவை வழக்கு பதிந்­தது.

இந்த முகவை 19 சந்­தே­கப்­பேர்­வ­ழி­களை ஏற்­கெ­னவே கைது செய்­துள்­ளது.