குத்தாட்டம் ஆடிவர மணமகள் மறுப்பு; நாற்காலிகள் பறந்தன

குத்தாட்டம் ஆடிவர மணமகள் மறுப்பு; நாற்காலிகள் பறந்தன

2 mins read
19ec3d7c-51f3-46ce-98c5-5982c48cb995
-

திருப்­பதி: ஆந்­தி­ரா­வில் கிழக்கு கோதா­வரி மாவட்­டத்­தில் நடந்த ஒரு திரு­மண விருந்து நிகழ்ச்சி ரக­ளை­யில் முடிந்து கை முறிந்­தும் மண்டை உடைந்­தும் ஐவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

மண­ம­கன், மண­ம­கள் வீட்­டார் இரு­வ­ரும் போட்டி போட்­டுக்­கொண்டு காவல் நிலை­யத்­தில் புகார் கொடுக்­கப்­போ­ன­போது அங்­கே­யும் ரகளை ஏற்­பட்­ட­தால் அதி­கா­ரி­கள் தலை­யிட்டு அவர்­களை எச்­ச­ரித்து ஒடுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­ட­தாக ஊடகத் தக­வல்­கள் கூறின.

தாலி கட்­டிக்­கொண்ட மண­மகள், மண­ம­க­னு­டன் சேர்ந்து குத்­தாட்­டம் ஆடிக்­கொண்டே விருந்து கூடத்­திற்கு வர மறுத்­து­விட்­டதே இவ்­வ­ளவு பிரச்­சி­னை­களுக்­கும் கார­ணம்.

ராமச்­சந்­தி­ர­பு­ரம் என்ற நக­ரில் உள்ள காவல்­து­றை­யில் தாக்­க­லான புகா­ரில் பல்­வேறு விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தன.

ராமச்­சந்­தி­ர­பு­ரத்­தைச் சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யம் என்­ப­வ­ருக்­கும் கஜ்­ரம் என்ற ஊரைச் சேர்ந்த பூஜிதா என்­ப­வ­ருக்­கும் திரு­ம­ணம் நடக்க இருந்­ததை முன்­னிட்டு திங்­கட்­கி­ழமை மாப்­பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்­தது.

அந்­நி­கழ்ச்­சி­யின்­போது ஆடல் பாடல் என மண்­ட­பம் களை­ கட்­டி­யது. அடுத்த நாள் காலை­யில் பூஜிதா கழுத்­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் தாலி­கட்­டி­னார்.

திரு­மண விருந்­துக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்­தது. அப்­போது மண­ம­க­னும் மண­ம­களும் குத்­தாட்­டப் பாட்­டிற்கு நட­ன­மா­டி­ய­ப­டியே விருந்து கூடத்­திற்கு வர­வேண்­டும் என்று சுப்­பி­ர­ம­ணி­யம் வீட்­டார் கேட்­ட­னர்.

ஆனால், தனக்கு நட­னம் ஆடத் தெரி­யாது என்று மணப்­பெண் மறுத்­து­விட்­டார். பெண்­ணின் உற­வி­னர்­களும் அவ்­வாறே கூறி­விட்­ட­னர்.

இத­னால் மண­ம­கன், மண­மகள் வீட்­டா­ருக்­கி­டையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்டு பிறகு கைகலப்­பாக மாறி­யது.

சுப்­பி­ர­ம­ணி­யத்தின் உற­வி­னர்­கள் நாற்­கா­லி­களைத் தூக்கி வீசி பூஜி­தா­வின் உற­வி­னர்­க­ளைத் தாக்­கி­னர். இத­னால் ஒரு மாதுக்கு மண்டை உடைந்­தது. வேறொரு­வருக்கு கை உடைந்தது. இதர மூவர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

தக­வல் அறிந்து விரைந்த காவல்­து­றை­யி­னர் காய­ம­டைந்­த­வர்­களை மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். அதை­ய­டுத்து இரு தரப்­பி­ன­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் புகார் கொடுக்க காவல்­நி­லை­யத்­தில் குவிந்­த­தால் அங்­கே­யும் ரகளை ஏற்­பட்­டது.