டேராடூன்: இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3,680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள துங்கநாத் கோயில், 6 முதல் 10 டிகிரி சாய்வதாக இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வடக்கு நோக்கி அமைந்துள்ள அந்த கோயிலின் நிலை பற்றி மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அதை பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என தாங்கள் கோரிக்கை விடுத்து உள்ளதாகவும் அந்தத் துறையின் அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது.

