புதுடெல்லி - சிட்னி விமானம் குலுங்கியது; பயணிகள் காயம்

புதுடெல்லி - சிட்னி விமானம் குலுங்கியது; பயணிகள் காயம்

1 mins read
30b2b96c-c1ff-429f-8fe0-6b2fd2caff2e
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் இருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நகருக்குச் செவ்­வாய்க்­கி­ழமை புறப்­பட்­டுச் சென்ற ஏர் இந்­தியா ஏஐ-302 என்ற விமா­னம் நடு­வானில் குலுங்­கி­யது.

அத­னால் ஏழு பய­ணி­கள் காயம் அடைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

விமா­னத்­தில் இருந்த மருத்து­வ­ரும் தாதி­யும் அவர்­களுக்கு முத­லு­தவி அளித்­த­னர்.

விமா­னம் சிட்­னி­யில் பத்­தி­ர­மாகத் தரை­யி­றங்­கி­யது. அங்கு மருத்­துவ உதவி தேவைப்­பட்­ட­வ­ருக்கு மேலும் உதவி வழங்­கப்­பட்­டது. யாரும் மருத்­து­வ­மனை­யில் சேர்க்கப்படவில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.