கர்நாடக மக்கள் நலனே தங்களது முக்கிய நோக்கம் என டி.கே.சிவகுமார் டுவிட் பசவராஜ் பொம்மை: காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமையில்லை

கர்நாடக மக்கள் நலனே தங்களது முக்கிய நோக்கம் என டி.கே.சிவகுமார் டுவிட் பசவராஜ் பொம்மை: காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமையில்லை

2 mins read
3da757f1-9040-4af9-a246-73891dac6272
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக முதல்­வரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தில் இந்த அள­வுக்கு தாம­தம் காட்­டி­யது காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரி­டையே ஒற்­றுமை உணர்வு இல்­லாத நிலை­யைக் காட்­டு­வ­தாக பாஜ­க­வின் மூத்த தலை­வ­ரும் முன்­னாள் முதல்­வரு மான பச­வ­ராஜ் பொம்மை விமர் சித்­துள்­ளார்.

அண்­மை­யில் நடந்து முடிந்த கர்­நா­ட­கச் சட்­டப்­பே­ர­வைத் தேர்த லில் 135 இடங்­களில் அறு­திப் பெரும்­பான்­மை­யு­டன் காங்­கி­ரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

இந்த வெற்­றிக்கு முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மை­யா­வும் மாநில காங்­கி­ரஸ் தலை­வ­ரான டி.கே.சிவ­கு­மா­ரும் கடு­மை­யா­கப் பாடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இவர்­களில் ஒரு­வர் மட்­டுமே முதல்­வர் பத­வியை வகிக்­க­மு­டி­யும் என்­ப­தால், அந்­தப் பத­வியை யாருக்கு வழங்­கு­வது என்­ப­தில் கடந்த ஆறு நாள்­க­ளாக இழு­பறி சூழல் நிலவி வந்­தது.

இது­தொ­டர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பச­வ­ராஜ் பொம்மை பேசியபோது, "நல்ல வெற்றி கிடைத்­தும் முதல்­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தில் திண­று­வது சரி­யல்ல. காங்­கி­ரஸ் கட்சி அர­சி­யல் செய்­வதை நிறுத்­தி­விட்டு, ஆட்சி அமைத்து மக்­க­ளுக்­குச் சேவை செய்யவேண்­டும்," எனத் தெரிவித்­தார்.

இத­னி­டையே, கர்­நா­ட­கத்­தின் புதிய முதல்­வ­ராக சித்­த­ராமை யாவும் துணை முதல்­வ­ராக டி கே சிவ­கு­மா­ரும் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யான நிலை­யில், நேற்று இரவு காங்­கி­ரஸ் எம்­எ­எல்ஏக்­கள் கூட்­டம் நடை­பெற்­றது.

நாளை 20ஆம் ­தேதி பதவி ஏற்பு விழாவை பிரம்­மாண்­ட­மாக நடத்­த­வும் காங்­கி­ரஸ் தலைமை திட்­ட­மிட்­டுள்­ளது.

சித்­த­ரா­மை­யா­வின் ஆத­ர­வா­ளர்­கள் ஆங்காங்கே அவருக்கு பால் அபி­ஷே­கம் செய்து மகிழ்ச்­சியை ெவளிப்­ப­டுத்­தி­னர். சிவ­குமா­ரின் சொந்த ஊரான ராம­ந­க­ரா­வில் காவ­லர்­கள் கண்­கா­ணிப்பு அதிகரிக்­கப்­பட்­டுள்­ளது.

"கர்­நா­ட­கா­வின் பாது­காப்­பான எதிர்­கா­ல­மும் மக்­க­ளின் நலனும் மட்­டுமே எங்­க­ளின் முக்­கிய நோக்­கம்," என டி.கே.சிவ­கு­மார் டுவிட்டரில் பதி­விட்­டுள்­ளார்.

இது தொடர்பாக டி கே சிவ குமாரின் சகோதரர் டி கே சுரேஷ் கூறுகையில், "எனது சகோதரர் முதலமைச்சராக விரும்பினார். ஆனால், அப்படி ஆகவில்லை. கட்சியின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளை இரண்டாகப் பிரித்து ஆட்சி செய்யும் ஒப்பந்தத்தை முன்மொழிந்ததாக கேள்விப்படுகிறேன்," என்று கூறியுள்ளார்.

இதனிடையே, சோனியா காந்தி இவ்விவகாரத்தில் தலை யிட்டதை தொடர்ந்தே டி கே சிவகுமார் சமாதானம் ஆனதாகவும் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிவ­கு­மா­ரை சமா­தா­னப்படுத்­தும் வகை­யில் அவ­ருக்கு ஆறு துறை­களை வழங்கவும் உறுதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.