கூட்டணி நிபந்தனையைத் தளர்த்திய மம்தா

கூட்டணி நிபந்தனையைத் தளர்த்திய மம்தா

1 mins read
26a783c4-be98-4988-915c-a72fc398110c
-

கோல்கத்தா: மக்­க­ள­வைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் உட்­பட எந்­தக் கட்­சி­யை­யும் ஆத­ரிக்­கப்போவ­தில்லை, தனித்தே போட்டி என்று கூறிவந்த மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி, கர்­நா­ட­கா­வில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் வெற்­றிக்­குப் பிறகு தனது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்­டுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு ஆத­ரவு கிடை­யாது என்­றும் பாஜ­க­வை­யும் காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும் சம தூரத்­தில் வைத்­தி­ருப்­ப­தாகவும் மம்தா கூறி வந்­தார். காங்­கி­ரஸ் கட்­சிக்கு ஆத­ரவு அளிக்க பல்­வேறு நிபந்­த­னை­க­ளை­யும் அவர் விதித்திருந்தார்.

மாநி­லங்­களில் வலி­மை­யாக உள்ள கட்­சி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட வேண்­டும் என்றும் மம்தா கூறி வந்­தார்.

இந்­நி­லை­யில், கர்­நா­ட­கா­வில் காங்­கி­ரஸ் வெற்­றிக்­குப் பிறகு தமது நிபந்­த­னை­க­ளைத் தளர்த்­திக்­கொண்­டுள்ள அவர், காங்­கி­ர­சுக்கு வெற்றி வாய்ப்­புள்ள தொகு­தி­களில் திரி­ணா­மூல் காங்­கிரஸ் ஆத­ர­வ­ளிக்கத் தயார் என்று கூறி­யுள்­ளார். தங்­க­ளுக்­கும் இதே­போல் காங்­கி­ரஸ் ஆத­ரவு தர­வேண்­டும் என்று மம்தா கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இதனை கர்­நா­டக காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே. சிவ­கு­மார் வர­வேற்­றுள்ள நிலை­யில், இந்­தச் சந்­தர்ப்­ப­வா­தத்தை ஏற்கமுடி­யாது. மம்தா தனது நிலைப்பாட்டை தளர்த்தினாலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யுடன் காங்கிரஸ் போட்டியிடும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.