தேநீர்க் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி சம்பாதிக்கும் இளைஞர்கள்

தேநீர்க் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி சம்பாதிக்கும் இளைஞர்கள்

1 mins read
fd3c6702-3aeb-4ba7-9514-ee2d27202bfa
-

இந்­தூர்: தேநீர்க் கடை மூலம் ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய ரூ.150 கோடி அள­வுக்கு சம்­பா­தித்து வரு­வ­தாகத் தெரி­வித்­துள்­ள­னர் அனு­பவ் தூபே, ஆனந்த் நாயக் என்ற இளை­யர்­கள். இவர்கள் பற்றிய செய்தி பலரையும் புருவம் உயர்த்தி வியக்க வைத்துள்ளது.

மத்­தி­யப் பிர­தேச மாநி­லம், இந்­தூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஆனந்த் நாயக். தொழில் தொடங்க விரும்பிய இவர், அனு­பவ் தூபே என்ற நண்­ப­ரின் உத­வியை நாடி­யுள்­ளார்.

இந்நிலையில், டெல்­லி­யில் ஐஏ­எஸ் தேர்­வுக்­காகப் பயிற்சி பெற்­று வந்த அனுபவ் தூபே தனது படிப்பை அப்­ப­டியே பாதி­யில் நிறுத்திவிட்டு இந்­தூர் வந்­துள்­ளார்.

இரு­வ­ரும் தங்­க­ளி­ட­மி­ருந்த மூன்று லட்­சத்தை முதலீடாகக் கொண்டு 'சாய் சுட்டா பார்' என்ற தேநீர்க் கடையைத் திறந்துள்­ள­னர்.

குறு­கிய காலத்தில் மக்­கள் மத்தியில் நல்ல வர­வேற்­பைப் பெற்­ற இக்கடை­யில் கண்­ணா டிக் கோப்­பை­க­ளுக்குப் பதி­லாக மண் குடு­வை­யில் மட்­டுமே தேநீர் வகை­கள் வழங்­கப்­பட்­டு­வருகின்றன.

கடந்த 2016ல் தொடங்­கப்­பட்ட இந்த தேநீர்க் கடை, தற்­போது நாடு முழு­வ­தும் 195 நக­ரங்­களில் 400க்கும் அதி­க­மான கிளைகளுடன் செயல் பட்டு வருகிறது.

முதல் கடையில் கிடைத்த லாபத்­தைக் கொண்டு அடுத்­தடுத்த கிளை­க­ளைத் தொடங்­கிய ­இளை­ஞர்­கள், தற்­போது ஆண்­டுக்கு ரூ.150 கோடி வரு­வாய் ஈட்டி வரு­கின்­ற­னர்.

தங்களது புதிய கிளைகளில் ஆத­ர­வற்­ற­வர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், மூன்­றாம் பாலி­னத்­தவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை வழங்கி முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.