இந்தியாவில் மீண்டும் 'பப்ஜி' அறிமுகம்

இந்தியாவில் மீண்டும் 'பப்ஜி' அறிமுகம்

1 mins read
1e7a281a-ebba-4358-b25d-8adc09ffb20f
-

புதுடெல்லி: மத்­திய அர­சால் தடை செய்­யப்­பட்­டுள்ள இணை­யம் மூலம் விளை­யா­டப்­படும் பப்ஜி விளை­யாட்டு பல்­வேறு மாற்­றங்­க­ளு­டன் இந்­தி­யா­வில் மீண்­டும் அறி­மு­க­மாக உள்­ளது.

மூன்று மாதங்­க­ளுக்கு சோதனை அடிப்­ப­டை­யில் இந்த விளை­யாட்­டுக்கு அனு­மதி வழங்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தென்கொரி­யா­வைச் சேர்ந்த இணைய விளை­யாட்­டு­களை உரு­வாக்­கும் கிராப்­டன் நிறு­வனத்­துக்குச் சொந்­த­மான பப்ஜி, வன்­மு­றை­கள் நிறைந்த விளை­யாட்­டா­கும்.

குறு­கிய காலத்­தி­லேயே ஏரா­ள­மான வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில், 2020ஆம் ஆண்டு இந்­திய, சீன எல்­லைப் பிரச்­சினை கார­ண­மாக சீன கைப்­பேசி, இணைய செய­லி­க­ளுக்கு இந்­திய அரசு விதித்த தடை­யில் பப்ஜி விளை­யாட்­டும் சிக்­கி­யது. கிராப்­டன் நிறு­வ­னம் சீனா­வின் டென்­சென்ட் நிறு­வ­னத்­தின் ஆத­ர­வு­டன் செயல்­ப­டு­வ­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

எனி­னும் சில மாற்­றங்­க­ளு­டன் பிஜி­எம்ஐ (பேட்­டில்­கி­ர­வுண்ட்ஸ் மொபைல் இந்­தியா) என்ற பெய­ரில் கிராப்­டன் நிறு­வ­னம் இந்த விளை­யாட்டை இந்­தி­யா­வில் அறி­மு­கம் செய்­தது. அதற்­கும் நல்ல வர­வேற்பு கிடைத்­தது என்­றா­லும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்­தச் செய­லிக்­கும் இந்­திய அரசு தடை விதித்­தது.

இப்­போது மூன்­றா­வது முறை­யாக இந்­திய சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு பிஜி­எம்ஐ விளை­யாட்டை கிராப்­டன் நிறு­வ­னம் இந்­தி­யா­வில் அறி­மு­கம் செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது. பல்­வேறு நிபந்­த­னை­க­ளு­டன் இதற்­கான அனு­ம­தியை இந்திய அரசு வழங்கி உள்­ள­தாக ஊடகச் செய்தி தெரி­விக்­கிறது.