புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் எட்டு புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கான ஜி20 பிரிவின் இயக்குநர் எம்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில அரசுகள் 26 புதிய நகரங்கள் குறித்த முன்மொழிவுகளை அனுப்பி உள்ளதாகவும் அவை ஆராயப்பட்டு வருவதாகவும் போபாலில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
"அந்தப் பட்டியலில் இருந்து எட்டு நகரங்களைத் தேர்வு செய்து முழுமையமாக மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
"இந்தப் புதிய நகரங்களுக்கான இடங்கள், அவற்றை உருவாக்குவதற்கான கால அளவுகளை மத்திய அரசு மிக விரைவில் அறிவிக்கும்," என்றார் எம்.பி.சிங்.

