ஜி20: காஷ்மீரில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன

ஜி20: காஷ்மீரில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன

1 mins read
45aee65e-1372-415d-8ddc-aed2854346e7
-

ஸ்ரீந­கர்: ஜி20 அமைப்­பிற்கு இந்­தியா இவ்­வாண்டு தலைமை தாங்­கு­கிறது. அதன்­படி, ஜி20 உச்­ச­நிலை மாநாடு இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­களில் நடை­பெற்று வரு­கிறது.

அந்த வகை­யில், சுற்­றுலாத் துறை தொடர்­பான ஜி20 மாநாடு நாளை ஜம்மு-காஷ்­மீர் தலை­ந­கர் ஸ்ரீந­க­ரில் நடை­பெற உள்­ளது.

காஷ்­மீ­ரில் ஜி20 மாநாடு நடை­பெற உள்ள நிலை­யில் அங்கு பாது­காப்­புப் பணி­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்திய ராணு­வம், இந்திய தேசிய பாது­காப்­புப் படை, கடற்­ப­டை­யின் சிறப்பு மின்­னல் படை வீரர்­கள், எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­னர், மத்­திய ரிசர்வ் காவல்­து­றைப் படை­யி­னர், ஷாஷ்த்ரா சீமா பெல் படை­யி­னர் (இந்தோ-நேப்பாளம், இந்தோ-பூட்­டான் எல்­லைப் பாது­காப்பு படை­யி­னர்), காஷ்­மீர் காவல்­துறை எனப் பல அடுக்கு பாது­காப்பு போடப்­பட்டுள்­ளது.

இந்­நி­லை­யில், ஜம்மு-காஷ்­மீ­ரின் பல்­வேறு மாவட்­டங்­களில் நேற்று இந்திய தேசிய புல­னாய்வு அமைப்பு அதி­ரடி சோதனை நடத்தியது.

பயங்­க­ர­வா­தம் தொடர்­பான வழக்­கில் ஸ்ரீந­கர், புல்­வாமா, அவந்­தி­புரா, அனந்த்­நாக், சோபி­யான், பூஞ்ச், குப்­வாரா என ஏழு மாவட்­டங்­களில் 15 இடங்­களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதி­கா­ரி­கள் சோதனை நடத்தினர்.

ஸ்ரீநகரில் நடைபெற இருக்கும் உச்சநிலை மாநாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற இலக்குடன் உயர் விழிப்புநிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

காஷ்மீரில் உள்ள டால் ஏரியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட இந்திய மின்னல் படை வீரர்கள்.

படம்: இபிஏ