பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வானூர்திகள்

பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வானூர்திகள்

1 mins read
83fb4119-9ba4-41ee-846a-d7b180f35c73
-

அமர்­த­ச­ரஸ்: பஞ்­சாப் மாநி­லம் அமிர்­த­ச­ரஸ் மாவட்­டம் உதார் தானி­வால் எல்­லைப் பகு­தி­யில் இந்­திய எல்­லைப் பாது­காப்புப் படை வீரர்­கள் தீவிர கண்­காணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர். அப்­போது இந்­திய வான்­வெ­ளி­யில் பாகிஸ்­தா­னில் இருந்து அத்­து­மீறி நுழைந்து சந்­தே­கத்­திற்கு இட­மாகப் பறந்த ஆளில்லா வானூர்­தி­களை அவர்­கள் சுட்­டு­வீழ்த்­தி­னர்.

இதே மாவட்­டத்­தில் ரத்­தன் குராட் பகு­தி­யில் எல்­லை­யைக் கடந்து இந்­தி­யா­வுக்­குள் நுழைந்த மற்­றொரு பாகிஸ்­தா­னிய ஆளில்லா வானூர்­தி­யை­யும் இந்­திய எல்­லைப் பாது­காப்புப் படை­யி­னர் சுட்டு வீழ்த்­தி­னர். கறுப்பு நிறத்­தி­லான அந்த இரண்டு ஆளில்லா வானூர்­தி­க­ளை­யும் சோதனை செய்­த­போது அவற்றில் இரண்டு பொட்­ட­லங்­கள் இருந்­த­தா­க­வும் அவற்­றில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருள்­கள் இருந்­த­தா­க­வும் தெரி­ய­வந்­தது.

பொட்டலங்களில் இருந்த போதைப்­பொ­ருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.