புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இம்மாதம் 28ஆம் தேதியன்று திறந்துவைக்கும் மோடி

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இம்மாதம் 28ஆம் தேதியன்று திறந்துவைக்கும் மோடி

2 mins read
2e45a195-d508-4071-8c93-d3d88059178c
-

புது­டெல்லி: இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் தற்­போது இருக்­கும் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் ஏறத்­தாழ 96 ஆண்­டு­கள் பழ­மை­யா­னது. இந்­தக் கட்­ட­டத்தை இடிக்­கா­மல் பழைய கட்­ட­டத்தை ஒட்டி 65,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் 'சென்ட்­ரல் விஸ்டா' என்ற பெய­ரில் புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தைக் கட்­டும் பணி­கள் 2019ஆம் ஆண்­டில் தொடங்­கின.

2021, 2022ஆம் ஆண்­டு­களில் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­ட­போ­தும் இதற்­கான பணி­கள் தொடர்ந்து நடை­பெற்­றன.

ரூ. 20,000 கோடி மதிப்­பிலான 'சென்ட்­ரல் விஸ்டா' கட்­ட­டப் பணி­கள் கடந்த நவம்­பர் மாதம் முடிந்­து­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், பல்­வேறு கார­ணங்­க­ளால் தாம­த­மாகி­விட்­டது.

தற்­போது பணி­கள் முடிந்த நிலை­யில், இம்­மா­தம் 28ஆம் தேதி இந்தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தைத் திறந்து வைக்­கி­றார். புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தில் அமைந்­துள்ள மக்­க­ளவை அரங்­கில் 888 உறுப்­பி­னர்­கள் வச­தி­யாக அம­ரும் வகை­யில் இட­வ­சதி செய்­யப்­பட்டு உள்­ளது. இதைப்­போல மாநி­லங்­க­ள­வை­யில் 300 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர வசதி உள்­ளது. அதே­நே­ரம் இரு அவை­களின் கூட்­டுக்­கூட்­டம் நடத்­தப்­பட்­டால் 1,280 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அம­ரும் வகை­யி­லும் மக்­க­ளவை அரங்­கில் வசதி செய்­யப்­பட்டு உள்­ளது.

புதிய கட்­ட­டத்­தில் பிரம்­மாண்­ட­மான அர­சி­யல் சட்ட மண்­ட­பம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஓய்வு அறை­கள், பிரம்­மாண்ட நூல­கம், பல்­வேறு நாடாளுமன்ற நிலைக்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கான பெரிய அறை­கள், உணவு அருந்­தும் பகுதி, பெரிய வாகன நிறுத்­து­மி­டம் உள்­ளிட்ட வச­தி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

திறப்பு விழா­வில் ராகுல் காந்தி கலந்­து­கொள்­ள­மாட்­டார்

இதற்­கி­டையே, காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தின் திறப்பு விழா­வில் கலந்­து­கொள்­ள­மாட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் அமெ­ரிக்­கா­வுக்குப் பத்து நாள் பய­ண­மாக இம்­மா­தம் 31ஆம் தேதி புறப்­பட்­டுச் செல்லத் திட்­ட­மிட்­டி­ருந்­தார். ஆனால் மூன்று நாள்­க­ளுக்கு முன்­ன­தாக இம்­மா­தம் 28ஆம் தேதி­யன்று ராகுல் அமெ­ரிக்க பய­ணம் மேற்­கொள்­கி­றார்.